எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அவரது நினைவு மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதங்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்திலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை கழக அரசுதான் கொண்டாடும் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்ன அந்த தெய்வ வாக்கு பலித்து, இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க அரசுதான் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான இடத்தினை மேம்படுத்தி, சென்னை மாநகராட்சி மூலம் இயற்கை எழில்கொஞ்சும் பூங்கா ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம் ஆகியவற்றிற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழா காணும் நிலையில் உள்ளன.
முத்தாய்ப்பாக ஒருபுறத்தில் வங்கக் கடல் அலை வந்து வந்து தாலாட்ட, மறுபுறத்தில் மக்கள் கடல் அலையாய் வந்து வந்து கண்ணீர் வடிக்க, மக்கள் திரள் தினந்தோறும் வந்து வந்து வழிபட்டு மகிழும் ஒரு புனிதத்தலம் சென்னையில் உள்ளது. அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த கீர்த்தியாகி அல்லலுறும் ஏழைகளே இல்லையெனும் நிலைமைதனை ஆக்கிய மூர்த்தியாகி தங்குதடை ஏதுமின்றி தமிழகம் முன்னேறதான் தேய்ந்து புனிதமாகி தரணியெங்கும் புகழுடலால் தான் நிறைந்துவான் கலந்த வரலாறாய் மாறிவிட்ட அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தான் அது.
சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பீட்டில், நினைவு மண்டபம் அமைக்க செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கையாக உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,கோயம்புத்தூர் மாவட்டம், கொண்டையம் பாளையம் கிராமத்தில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்க இத்துறையால் அரசாணை வெளியிடப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் இத்துறையில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்கள் குறித்து தமிழக மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் 360 டிகிரியில் படம் எடுக்கப்பட்டு அதனை செய்தி மக்கள் தொடர்புத்துறை இணையதளம் மற்றும் கூகுள் இணையதளம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை ஜூன் 2017 முதல் ஜனவரி 2018 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார் என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு அங்கீகாரத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பட்டயப் படிப்புகள் இளங்கலை காட்சிக்கலை நான்காண்டு பட்டப்படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. 2016-2017 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆறுபட்டப் படிப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன.
இதுவரை, செய்தி-மக்கள் தொடர்புத் துறையால் 183 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அரசுக்கு, ஏறத்தாழ 37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிகர வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
கேரளாவில் 11 மாவட்டங்களில் 13-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
10 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் 11 மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.