எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நான் புத்திசாலி என்றோ, நானே புத்திசாலி என்றோ நிரூபிக்க துடிக்கும் ஏராளமானோர் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய புத்தி கூர்மையையும், திறமையையும் காட்டுவதற்காக மற்றவர்களைக் குறைவாகக் கூறுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படி ஆணவம், தலைக்கனம் கொண்டவர்கள் நிறைந்த இந்த உலகில் நியாயமற்ற குற்றச்சாட்டுகளால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தாக்கப்படுகிறான். எனவே அவற்றை பொருட்படுத்தாமல் மற்றவர்கள் உங்களைத் தாழ்வாக நடத்த அனுமதிக்காமல், உங்களை அதிகாரம் செய்து தங்களது சொந்த லாபங்களுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்ளவிடாதீர்கள்.
அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ‘நான் சொன்னதைச் செய்’ என்று கட்டளையிட்டு வற்புறுத்துகிறார்களா அல்லது நாம் செய்ய விரும்பாத செயலை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களா அல்லது நம்மை மதிப்பதே இல்லை கண்டும் காணாதவர் போல் இருந்துவிடுகிறார்களா அல்லது நம் மனம் புண்படாதபடி நடந்துகொள்கிறார்களா அல்லது நாம் சொல்வதை ஆர்வத்துடன் செவிகொடுத்து கேட்கிறார்களா அல்லது நம்மோடு பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்களா என்று ஓவ்வொருவரும் இப்படித் தங்களைத் தாங்களே கேள்விகளை கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்களிலிருந்துதான் ஒருவன் பெருமைபடத்தக்க முறையில் வாழ்ந்து வருகிறானா, இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். உங்களுக்குக் கிடைக்கும் மரியாதை, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொருத்தே அமைகிறது.
எடுப்பார் கை பிள்ளையாக, முகதாட்சண்யம் கருதியோ, அல்லது மறுக்க மனோதைரியம் இல்லாமலோ அடுத்தவர் கோரிக்கை அனைத்திற்கும் நீங்கள் தலையாட்டும் பொம்மையாக நடந்து கொண்டால், மற்றவர்களுக்கு குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களாகத்தான் உருவெடுப்பீர்கள். உங்களுக்கு நீங்களே மதிப்பு கொடுக்காவிட்டால், மற்றவர் யாரும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். தன்னைக் குறைவாக மதிப்பிட்டுக் கொள்பவனை மற்றவர்களும் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள்.
ஒருவன் தன்னைப் பற்றி பெருமையாகக் கொண்டிருக்கும் கருத்தை உலகம் எளிதில் ஏற்காது. ஆனால் ஒருவன் தன்னைப் பற்றி கொண்டிருக்கும் தாழ்வான கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டு விடும்.
அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்
‘பயம்’ என்று தனியாக எதுவும் இல்லை. இது ஒரு உணர்ச்சியே. பல சமயங்களில்,“அப்படி ஏதேனும் நடந்து விட்டால்…” என்று நாமாக கற்பனை செய்து கொண்டு அச்சப்படுகிறோம். நாம் அச்சப்படுவதாலேயே எதிர் சக்திகளுக்கு தைரியம் வந்து விடுகிறது. எனவே பயந்தாங்கொள்ளியைக் கண்டு அதைவிட பயந்தாங்கொள்ளி அச்சப்பட்டால், முதல் பயந்தாங்கொள்ளியும் வீரனாகிவிடுவான்.
எவ்வளவு இடையூறுகள் தோன்றினாலும் நாம் எடுத்துக்கொண்ட முயற்சியை இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வெற்றி காண்பதைத்தான் நாம் ‘துணிச்சல்’ ‘தைரியம்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறோம்.
பயத்தை வெல்வதற்கு நீங்கள் எந்த காரியத்தைச் செய்ய பயப்படுகிறீர்களோ அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சிறந்த பாடகராக உருவாக ஆசைப்படுகிறீர்களா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நன்கு தயார்படுத்திக் கொண்டு பாட ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு நடுக்கம் ஏற்படக்கூடும். உங்கள் குரலின் தடுமாற்றத்தைக் கண்டு மற்றவர்கள் கேலியாகச் சிரிக்கலாம். ஆனால் முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள். தொடர்ந்து பாட முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
பல இடங்களில் இப்படித் தொடர்ந்து பாடி வரும் போது, உங்கள் குரல் மெருகேறும் மேலும் மற்றவர்களின் கருத்துக்களை சிறந்த முறையில் சுலபமாக எடுத்துச் சொல்லும் திறமை உங்களுக்கு கிடைத்து விட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள். பாடத்; தொடங்கிய ஆரம்பகால பயம் தற்போது உங்களை விட்டுச் சென்று விட்டதையும் நீங்கள் காண்பீர்கள். இப்படி நீங்கள் பயப்படும் எந்தக் காரியத்தையும் வலுக்கட்டாயமாகத் தொடர்ந்து செய்து வந்தால் பயப்படும் குணம் உங்களை விட்டு அகன்று சென்று விடுவதை நீங்கள் காணமுடியும்.
கவலைப்படும் பழக்கம் ஒரு நோய்
கவலைப்படுவது என்பது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகி விடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள், அதாவது கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகிவிடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம். நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள், அதுவே அவனை அவதிப்படுத்துகின்றன. ஒன்று கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு, மற்றொன்று எதிர்காலத்தில் என்னாகுமோ என்ற பய விளைவு. வெற்றிபெற விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கி தூர எறிந்து விட்டு வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஒருபோதும் நீங்கள் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள். நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.
தயக்கம் தாழ்வுக்குக் காரணம்
எதிலும் சிலர் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் அவநம்பிக்கை. அவநம்பிக்கைக்குக் காரணம் மனோதிடம் - மன உறுதி - இன்மை. ஒரு முடிவு எடுப்பார்கள்;. அது சரி வராது என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லி விட்டுப் போய்விட்டால், உடனே தங்கள் முடிவில் வேறொருவரை அனுகி, தன் முடிவு சரிதானா என்று கேட்பார். அவர் இன்னொரு புதிய யோசனையை சொல்வார்.
யோசனை கேட்பவரை விட யோசனை சொல்பவர் அதிக சுயநலவாதியாக இருப்பார். யோசனை கேட்பவரை எதில் இறக்கிவிட்டால் தனக்கு லாபம் என்று யோசிப்பார். அல்லது தனக்கு பயன் ஏற்படக் கூடிய யோசனையாக எதிரியின் திட்டம் இருந்தால் ‘அருமையான முடிவு உடனே செய். நான் இருக்கிறேன்; பார்த்துக் கொள்கிறேன்’ என்று தூண்டிவிடுவார். அவ்வளவு தான். அதனால் நாலுபேரிடம் விசாரித்துக் கொண்டு ஒரு முடிவு எடுப்பதில் தவறில்லை.
முடிவு எடுத்த பிறகு, காரியத்தில் இறங்குவது தான் விவேகமே தவிர, முடிவு எடுத்த பிறகு அதுபற்றி யாரிடமும் யோசனை கேட்பது பேதைமை. அது அச்சம், அவநம்பிக்கையின் விளைவு. இப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் செய்து முடித்த காரியங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், வாழ்க்கையின் கீழ்மட்டத்திலேயே தங்கி, வாழ்க்கையின் குறைந்த தேவைகளைக் கூடப் பெறாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தனக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடியவைகளையும் கோட்டை விட்டு விடுவார்கள். நான் இதை இப்படிச் செய்யப் போகிறேன். நாளை அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நினைப்பவன் தயங்காமல், தான் விரும்பும் காரியங்களை ஆரம்பித்து, அவற்றை ஒழுங்காக செய்து முடிப்பான்.
நீங்கள் தயக்கப் பேர் வழியாக மட்டும் இல்லாதிருந்தால் போதாது. தயக்கம், அவநம்பிக்கை, சோர்வு மனப்பான்மை கொண்டவர்களையும் நீங்கள் கிட்டே சேர்க்கக் கூடாது. இவர்களுடன் சேர்ந்து தொடங்கும் எந்த காரியத்திலும் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். அல்லது நடுவழியிலேயே இவர்கள் உங்களை விட்டு விட்டுப் பின்தங்கி விடுவார்கள். நீங்கள் வேறு துணை தேட வேண்டியிருக்கும்.
உணர்ச்சி வசப்படாதீர்கள்
இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கை ஒரு நாளைக்கு நூறு முறை உணர்ச்சிவசப்படச் செய்வது. கிராமிய வாழ்க்கையில் உள்ள அமைதி நகர வாழ்க்கையில் இல்லை. காரணம், இங்கே எல்லாம் கடிகாரத்தையொட்டிய வாழ்க்கை, காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு வாழ வேண்டிய நிர்பந்தம். உங்கள் மன தைரியத்தைக் குலைப்பதும் ஒரு வகை உணர்ச்சிதான். கோபம், பொறமை போல இதுவும் நம்மை கீழ்மைப்படுத்தும் உணர்ச்சிதான். இப்படியான கெடுதல் தரும் உணர்ச்சியை ஒருவன் புறக்கணிக்க வேண்டும். நம் உள்ளங்களில் சில சமயங்களில் உணர்ச்சிகள் பேயாட்டம் போடுகின்றன. காரணம், அந்த வகையான எண்ண ஓட்டங்களை நம் மனதுள் நாமே அனுமதிப்பது தான் காரணம். உடலுக்கும் உள்ளத்துக்கும் கெடுதல் தரும் உணர்ச்சி என்றால், அந்த உணர்ச்சி மனதில் தோன்றும் போதே வெளியேற்றி விட வேண்டும்.
எவர் ஒருவருக்கு எந்த ஒரு விஷயத்திலும் நஷ்டம் ஏற்படலாம். அந்த நஷ்டம் ஒரு விஷயமல்ல் அந்த நஷ்டம் அவன் உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளே அவன் வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன.
சிலர் தங்கள் சொத்துக்களை முழுமையாக இழந்துவிட்ட நிலையிலும் கூட, “ஆமாம். இழந்துவிட்டேன். அவற்றை மீண்டும் பெறுவேன். அதற்கான வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டேன். அது விஷயமாகத்தான் இப்போது இன்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் பழைய நிலைக்கு முன்னேறி விடுவேன்” என்பார் வெற்றியாளர். சொன்னது போலவே தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பார்.
ஆனால் தோல்வியாளர்கள் நஷ்டமடைந்து விட்டால் அதை எண்ணி எண்ணியே மருகி, புதிய முயற்சி எதிலும் ஈடுபடாமல் சோம்பி விடுவார்கள்.
சில பேர் தங்கள் முயற்சியில் தொடக்க நஷ்டம் வந்தவுடனேயே பயந்து பின்வாங்கி விடுவார்கள். பிறரது செய்கை, பேச்சு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், அவற்றைப் புறக்கணியுங்கள். உணர்ச்சி வசப்பட்டு சண்டை, விவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதியை இழக்காதீர்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
13-வது மகளிர் உலகக்கோப்பை: இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் : இன்று இறுதி போட்டியில் மோதல்
01 Nov 2025மும்பை : 13-வது மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப


