எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெண்பன்றிகள் சிறந்த தீவன மாற்றுத்திறன் கொண்டவைகளாகும். வெண்பன்றிகள் தாம் உட்கொள்ளும் ஒவ்வொரு 2½ - 3 கிலோ தீவனத்தையும் ஒரு கிலோ உடல் எடையாக மாற்றக்கூடியவைகளாகும். பன்றிகளின் வளர்ச்சியில்; தீவன மேலாண்மையானது மொத்த செலவினத்தில் 75 சதவிகிதம் பங்கு வகுக்கின்றது. ஆகையால் தீவனத்தை மினவும் சிக்கனமாக அதே சமயம் உற்பத்திக்கு தேவைப்படும் அளவு அளித்தல் அவசியமாகும்.
பன்றிகளின் உணவுப்பாதை ஒற்றை இரைப்பை உடையதாக உள்ளதால், மற்ற அசைபோடும் கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போல அதிக அளவு நார்த்;தீவனத்தை உண்ண முடியாது. எனினும், பன்றிகளின் தீவனத்தில் போதிய அளவு புரதமும், உயிர்ச்சத்துகளும் இருக்க வேண்டும். தீவன மேலாண்மை முறையில் வயது, பாலினம் மற்றும் உடற்செயலியலைக் கருத்தில் கொள்ள வேண்டும். தீவனத்தின் தன்மை மற்றும் தீவனம் அளிக்கும் முறைகளைப் பொறுத்துத் தீவன மாற்றுத்திறன் மற்றும் இறைச்சியின் தரம் ஆகியவை மாறுபடுகின்றன.
பொதுவாக பன்றிகளின் உணவூட்டம் சமச்சீர் சரிவிதத்தில் அமைய வேண்டும். பன்றிகள் வேகமாக வளரக்கூடியதால் தீவனத்தில் உள்ள புரதம் மற்றும் அமினோ அமிலங்களின் அளவுகள் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பன்றிகளுக்குத் தேவையான எரிசக்தி, சாம்பல் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புகள் தீவனக் கலவையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பன்றிகளின் வளரும் பருவத்திற்கேற்ப தீவனப் பராமரிப்பு: குட்டிப் பன்றிகள்
பன்றி குட்டிகள் பிறந்த 7 முதல் 10 நாட்களுக்கு பிறகு அதாவது 2 கிலோ எடை முதல் 10 கிலோ எடை வரை உள்ள குட்டிகளுக்கு குட்டித்தீவனத்தை அளிக்கலாம். குட்டிகள் தாயிடமிருந்து பாலை அருந்திவிட்டு வந்த பிறகு குட்டித் தீவனம் மற்றும் குடி நீரையும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு குட்டியும் நாளொன்றுக்கு சராசரியாக 250 கிராம் முதல் 750 கிராம் வரை தீவனத்தை உண்ணும். குட்டித் தீவனமானது குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்கும் வயது (56 நாட்கள்) வரை கொடுக்க வேண்டும். குட்டிப் பன்றிக்கான தீவனத்தில் அதிக அளவு புரதச்சத்தும் (22 – 23 சதவீதம்), வைட்டமின்களும் இருக்க வேண்டும். நார்சத்தை குட்டிகள் செரிமானம் செய்ய முடியாது என்பதால் பசுந்தீவனம் அளிக்கக்கூடாது. குட்டிகளை எளிதில் நோய் தாக்கும் என்பதால்; உணவுக்கூட கழிவுகளை உணவாக அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வளரும் பன்றிகள்
பன்றிகளின் எடை 10 முதல் 60 கிலோ இருக்கும் போது இத்தீவனம் கொடுக்க வேண்டும். பன்றிகுட்டிகளை தாயிடமிருந்து பிரித்த பின் அவற்றை சிறு குழுக்களாக வைத்து தீவனம் அளிக்கலாம். இந்த தீவனத்தில் 20 – 22 சதவீதம் புரதச் சத்து இருக்க வேண்டும். வளரும் பன்றி தீவனத்தை, சராசரியாக தினமும் 850 கிராம் முதல் 1600 கிராம் வரை கொடுக்க வேண்டும்.
உணவுக்கூட கழிவுப் பொருட்கள், ரொட்டித் தொழிற்சாலைக் கழிவுகளை இவ்வயது பன்றிகளுக்கு முடிந்த அளவு கொடுத்து தீவனச் செலவை குறைக்க வேண்டும். சுமார் 10 கிலோ கழிவுப் பொருளுக்கு ஒரு கிலோ அடர் தீவனத்தை குறைத்துக் கொள்ளலாம். அதேபோல் வேலிமசால், மொச்சை, பெர்சீம், சுபாபுல் மற்றும் புல் வகைகள் பசுந்தீவனங்களை 3லிருந்து 5 கிலோ வரை அளித்து தீவனச் செலவை குறைத்துக் கொள்ளலாம்.
வளர்ந்த பன்றிகள்
பன்றிகளின் எடை 60 கிலோவிற்கு மேல் இருக்கும் போது பன்றிகளின் தேவைக்கேற்ப இனவிருத்திக்கெனவும், விற்பனைக்கெனவும் குழுக்களாக பிரித்து தீவனம் அளிக்கலாம். இத்தீவனத்தில் புரதச்சத்து 16 சதவீதம் மற்றும் எரிசக்தி 3170 கிலோ கலோரிஃகிலோ அளவிற்கு இருக்குமாறு கலவை செய்து பன்றிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கம் இருந்தால் புரதத்தின் அளவை குறைத்து தீவனக் கலவையை தயார் செய்து அளிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 1750 கிராம் முதல் 2200 கிராம் வரை கொடுக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம்.
இனப்பெருக்க பன்றிகள்
ஆறு மாதம் முதல் 8 மாத வயதிலான, அதிக எடை கொண்ட (70 – 80 கிலோ கிராம்) பன்றிகளை தேர்வு செய்து தனி குழுவாக அமைத்து பராமரிக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட தீவனமுறையைக் கையாள வேண்டும். தீவனத்தில் கொழுப்பு சத்து குறைவாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு தீவனக் கலவையில்; புரதம் 12 சதவீதம் மற்றும் எரிசக்தி 3210 கிலோ கலோரிஃ கிலோ அளவிற்கு இருக்க வேண்டும். பசுந்தழைகளை 3 – 5 கிலோ வரை கொடுக்கலாம். தீவனத்தில் கொழுப்புச் சத்தின் அளவைக் குறைப்பதால் அவற்றின் இனப்பெருக்கத்திறன் அதிகரிப்பதுடன் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மேலும், குட்டிகளை ஈனுதல் எளிதாகும். ஆண் பன்றிகளில் இனவிருத்தித் திறனும் அதிகரிக்கும்.
சினைப் பன்றிகள்
சினைப்பன்றித் தீவனத்தை சரியான அளவு கொடுப்பதால் பன்றிகுட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆரோக்கியமான குட்டிகளாகவும் மற்றும் அதிக எடையுடனும் இருக்கும். சினைப்பன்றிகளுக்கு தினமும் சராசரியாக 2 முதல் 3 கிலோ வரை தீவனத்தை கொடுக்கலாம். தினமும் 0.25 கிலோ முதல் 0.3 கிலோ வரை எடை கூட்டினால் போதுமானது. சினைக்கால இறுதியில் பன்றிகள் குட்டிகள் ஈனும் போதும், ஈன்ற பிறகும் அதற்குத் தகுந்தாற் போல் தீவனத்தில் ஊட்டச்சத்திiனை அளிக்க வேண்டும். சினைப்பன்றிகள் குட்டி ஈனுவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னதாகவே தீவன அளவை குறைத்து விட வேண்டும். மேலும், தீவனம் எளிதில் செரிமானம் ஆவதுடன் அஜீரண கோளாறுகள் உண்டாகாதவாறு இருக்க வேண்டும். குட்டி ஈனும் தினத்தில் பன்றிகளுக்கு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். தீவனத்தை கொடுக்க கூடாது. குட்டி போட்ட அடுத்த நாள் 1 முதல் 1.5 கிலோ வரை தவிடு கலந்த தீவனத்தை கொடுக்க வேண்டும். பன்றி குட்டிகளின் வளர்ச்சி அதன் தாய்பன்றிக்குக் கொடுக்கப்படும் தீவனத்தின் செறிவு மற்றும் தரம், குட்டிகளின் எண்ணிக்கை மற்றும் தாய்பாலின் அளவு போன்றவற்றை பொறுத்தே அமையும். எனவே, குட்டிகள் ஈன்ற முதல் வாரத்திலிருந்து தீவன அளவை அதிகப்படுத்தி முழுத்தீவனம் அளித்திடல் வேண்டும்.
பால் கொடுக்கும் பன்றிகளின் தீவனக் கலவையானது 13 சதவீதம் புரதம் மற்றும் 3210 கிலோ கலோரி எரிசக்தி கொண்டவையாக இருக்க வேண்டும். இப்பன்றிகளுக்கு 2-3 கிலோ தீவனமாவது உடல் பராமரிப்புக்கும், 0.2 முதல் 0.5 கிலோ தீவனம் குட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சேர்த்து கொடுக்க வேண்டும். தீவனக் கலவையானது சரியான விகிதத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கொண்டவையாக இருக்க வேண்டும். மேலும் பசுந்தழைகளை 3-5 கிலோ வரை கொடுக்கலாம்.
வெண்பன்றிகளுக்கு அடர் தீவனம் அளித்தல்
பன்றிகளுக்கான அடர் தீவனத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், அரிசி, கோதுமை, மரவள்ளிக்கிழங்கு போன்றவையும் புரதம் அதிகமுள்ள சோயா புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, மீன்தூள் மற்றும் கோதுமைஃஅரிசி தவிடு ஆகியவையும் உயிர்சத்து, தாது உப்புகளும் உரிய விகிதத்தில் இருக்க வேண்டும். பன்றிகள் பராமரிப்பில் தீவனத்திற்கான செலவைக் கட்டுப்படுத்த பண்ணையாளர்கள் சொந்தமாக எளிய முறையில் அடர்தீவனத்தை தயாரித்துக் கொள்ளலாம்.
பன்றிகளுக்கு அடர்தீவனக் கலவை தயாரிப்பதற்கான முறைகள்
வ.எண் உணவுப் பொருட்கள் குட்டிகளுக்கான தீவனம் (மூ)
(14 வது நாள் முதல் 56 வது நாள் வரை) வளரும் பன்றிகள் (மூ)
(60 கிலோ வரை வளர்ந்த பன்றிகள் (மூ)
(60 முதல் 110 கிலோ வரை சினைப் பன்றி மற்றம் பால் கொடுக்கும் பன்றிகள் (மூ)
1 தானிய வகைகள் : (சேளம், மக்காச்சோளம், கம்பு, உடைந்த கோதுமைஃஅரிசி) 65 50 50 50
2 புpண்ணாக்கு வகைகள் : (கடலைஃசோயாஃஎள்) 14 18 20 20
3 வெல்லக் கழிவு 5 5 5 5
4 தவிடு வகைகள் : (கோதுமை தவிடுஃஅரிசி தவிடு) 1 15 25 18
5 மீன் தூள் 5 5 5 5
6 தாது உப்பு கலவை 1 1.5 1.5 1.5
7 சமையல் உப்பு - 0.5 0.5 0.5
இத்துடன் கூடுதலாக ஏ பி டி வைட்டமின் கலவை 100 கிலோவிற்கு 10 கிராம் வீதமும், 100 கிலோ தீவனத்தில் 1.2 கிராம் எதிருயிரி மருந்து இருக்கும்படி தேவையான அளவில் சேர்க்க வேண்டும். பொதுவாக தீவனத்தின் தரமானது, ஒவ்வொரு மாதத்திலும் பன்றி 10 கிலோ எடை கூடும் அளவு இருக்க வேண்டும்.
அடர் தீவனம் அளிக்க வேண்டிய அளவு (ஒரு நாளைக்கு) வளர்ந்த ஆண் மற்றும் பெண் பன்றி - 2.5 கிலோ
சினைப் பன்றிகள் - 3.0 கிலோ
பால் ஊட்டும் பன்றிகள் - 3.5 கிலோ
தீவன முறை
• பன்றிகளுக்கு எப்போதும் வேண்டிய அளவிற்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்யவது மிக முக்கியம்.
• பண்ணையில் ஒரு குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே தினசரி கடைபிடிக்க வேண்டும். தீவனங்களை திடீரென்று மாற்றுவது நல்லதல்ல. தீவனமிடும் நேரமும் தினந்தோறும் ஒரே நேரமாக இருந்தால் நல்லது.
• தீவனமானது சரியான அளவிற்கு தேவையான எரிசக்தி, புரதம், தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வளரும் பருவத்திற்கேற்ப கொண்டிருக்க வேண்டும்.
• சமயலறை கழிவு அல்லது உணவு விடுதியில் மீதமான உணவுப் பொருட்களைப் பன்றிகளுக்கு கொடுக்கலாம். இவற்றில் எரிசக்தி அதிகமாக இருப்பதோடு தீவனச் செலவும் குறையும்.
• தீவனக் கலவையில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தேவைக்கேற்ப கலந்து கொடுக்கலாம்.
பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பன்றிகளுக்கு முறையான தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் பன்றிகளில் வளர்ச்சி குறைவும், அதிகமான குட்டிகள் இறப்பும் ஏற்படுகிறது. இந்நிலையை போக்கவும், இலாபகரமாக பண்ணையை நடத்தவும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு தீவனமுறையை கையாளுவது அவசியம்.
மேலும் தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625. தொகுப்பு: மு.வீரசெல்வம், சோ.யோகேஷ்பிரியா, கோ.ஜெயலட்சுமி, மா.வெங்கடேசன், ம.சிவகுமார் மற்றும் ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.