முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

சியோல்: கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 22–20, 21–17 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற கால்இறுதி போட்டியில் பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிதானியை எதிர்கொண்டார்.  காலிறுதி போட்டியில்  ஜப்பானின் மிடானியை 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து