எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் அப்பா, அம்மாவை தினமும் வணங்க வேண்டும். வெ ளியில் செல்லும் போது நெற்றியில் திருநீரோ, குங்குமமோ அணிந்து சென்றால் அகால மரணத்திற்கு வாய்ப்பே கிடையாது என்று துாத்துக்குடியில் விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் தெரிவித்தார்.
சொற்பொழிவு
துாத்துக்குடியில் விட்டல் தாஸ் மகராஜ் சுவாமிகளின் பாண்டுரங்கன் கதை குறித்த பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை துவங்கியது. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பஜனை சொற்பொழிவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது;
இன்றைக்கு இரண்டு மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வம்புகதை தான் அதில் அதிகமாக இருக்கிறது. அதுவும் அடுத்தவரை பற்றி பேசுவதில் அதிக சுகம். அதனை தான் பேசுகின்றனர். அப்படி பேசுவதை விடுத்து கோவிந்தா என்று சொன்னால் மனமும் சுகப்படும். நல்ல துாக்கமும் வரும்.கஷ்டம் வந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லக் கூடாது. பகவானிடம் நமது கஷ்டத்தை சொன்னால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். கஷ்டமும் நீங்கும். மனைவி, குழந்தைகளிடம் கூட கஷ்டத்தை சொல்ல கூடாது. நண்பரிடம் சொல்லலாம். பகவானை நண்பராக நினைத்து சொல்லிவிட்டால் கஷ்டம் தானாக நீங்கி விடும். அறைக்கதவை சாத்திவிட்டு நம் கஷ்டத்தை மனசார நினைக்காமல் வாய்விட்டு பகவானிடம் சொல்ல வேண்டும். கடவுளிடம் நாம் வாய்விட்டு கஷ்டத்தை சொன்னால் நிச்சயமாக அந்த கஷ்டம் தீரும். பட்டம், பதவி தேவையில்லை. கஷ்டம் நீங்கினால் போதும் என்று பகவானை தரிசிக்க வேண்டும். இறைவனை வழிபடுவதற்கு சாஸ்திரங்கள் ஐந்து வகையான பக்திகளை சொல்லி இருக்கிறது. சம்மந்தம் இருந்தால் தான் உறவு வரும். இதனால் இறைவனை மனதார நினைத்து வணங்க வேண்டும். நமக்கு உறவு இருந்தால் தான் அதன் மேல் அதிகமான பிடிப்பு வரும். நாம் யாரோ, இறைவன் யாரோ என்று இருக்காமல் பிடிப்புடன் இறைவனை வழிபட வேண்டும்.இன்றைக்கு ஜோதிடர் சொன்னால் தான் கோயிலுக்கே போகின்றனர். அந்த அளவிற்கு நிலமை இருக்கிறது. அப்படி இருக்க கூடாது. கஷ்டம் நீங்கனும் என்பதற்காக மட்டும் தான் கோயிலுக்கு செல்கின்றனர். அப்படி இருக்க கூடாது. பக்தி என்பது உண்மையான அன்பு.
வணங்க வேண்டும்
இறைவனை பிடித்திருப்பதை இன்னும் திடமாக பிடிக்கத்தான் இதுபோன்று சொற்பொழிவு மூலம் கதைகள் சொல்கிறோம். சிறந்த பக்தி மதுர பக்தி என்னும் பிரம்ம பக்தி தான். தெய்வத்தை நாயகனாக நினைக்கும் பக்தி இது. நம்மால் நிச்சயமாக ஐந்தில் மூன்று பக்திகளை மிக எளிதாக கடைபிடிக்க முடியும். அதுவும் இறைவனை நண்பராக நினைக்கும் பக்தி நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.பத்து பேர் நம்மை சுற்றி இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கஷ்டம் வந்தால் மூளை வேலை செய்யாது. நல்ல காலத்தில் மட்டும் தான் நமக்கு மூளை வேலை செய்யும். காலத்துக்கு தான் புத்தி வேலை செய்யும். உடம்பை நம்ப முடியாது. யாரையும் நம்ப கூடாது. பகவானை மட்டும் தான் நம்ப வேண்டும். அன்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும். நம்பிக்கை பகவானிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அப்பா, அம்மா புண்ணியம் செய்தால் பிறக்கும்.வசதி இருந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. அப்பா, அம்மாவை வணங்கி அவர்களை நல்ல படியாக வைத்திருந்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும். குழந்தைகள் கட்டாயம் அப்பா, அம்மாவை வணங்க வேண்டும். அதே போல் வெ ளியில் செல்லும் போது கட்டாயம் திருநீறோ, குங்குமமோ ஏதாவது நெற்றியில் அணிந்து செல்ல வேண்டும். நெத்தியில் குங்குமமோ, விபூதியோ பூசிச் சென்றால் அகால மரணம் வரவே, வராது. அப்பா, அம்மாவை குழந்தைகள் கட்டாயம் நமஸ்காரம் செய்ய வேண்டும் இவ்வாறு விட்டல்தாஸ் சுவாமிகள் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
லவ் மேரேஜ் திரைவிமர்சனம்
30 Jun 2025மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் பிரபுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.