எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் அப்பா, அம்மாவை தினமும் வணங்க வேண்டும். வெ ளியில் செல்லும் போது நெற்றியில் திருநீரோ, குங்குமமோ அணிந்து சென்றால் அகால மரணத்திற்கு வாய்ப்பே கிடையாது என்று துாத்துக்குடியில் விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் தெரிவித்தார்.
சொற்பொழிவு
துாத்துக்குடியில் விட்டல் தாஸ் மகராஜ் சுவாமிகளின் பாண்டுரங்கன் கதை குறித்த பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை துவங்கியது. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பஜனை சொற்பொழிவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது;
இன்றைக்கு இரண்டு மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வம்புகதை தான் அதில் அதிகமாக இருக்கிறது. அதுவும் அடுத்தவரை பற்றி பேசுவதில் அதிக சுகம். அதனை தான் பேசுகின்றனர். அப்படி பேசுவதை விடுத்து கோவிந்தா என்று சொன்னால் மனமும் சுகப்படும். நல்ல துாக்கமும் வரும்.கஷ்டம் வந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லக் கூடாது. பகவானிடம் நமது கஷ்டத்தை சொன்னால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். கஷ்டமும் நீங்கும். மனைவி, குழந்தைகளிடம் கூட கஷ்டத்தை சொல்ல கூடாது. நண்பரிடம் சொல்லலாம். பகவானை நண்பராக நினைத்து சொல்லிவிட்டால் கஷ்டம் தானாக நீங்கி விடும். அறைக்கதவை சாத்திவிட்டு நம் கஷ்டத்தை மனசார நினைக்காமல் வாய்விட்டு பகவானிடம் சொல்ல வேண்டும். கடவுளிடம் நாம் வாய்விட்டு கஷ்டத்தை சொன்னால் நிச்சயமாக அந்த கஷ்டம் தீரும். பட்டம், பதவி தேவையில்லை. கஷ்டம் நீங்கினால் போதும் என்று பகவானை தரிசிக்க வேண்டும். இறைவனை வழிபடுவதற்கு சாஸ்திரங்கள் ஐந்து வகையான பக்திகளை சொல்லி இருக்கிறது. சம்மந்தம் இருந்தால் தான் உறவு வரும். இதனால் இறைவனை மனதார நினைத்து வணங்க வேண்டும். நமக்கு உறவு இருந்தால் தான் அதன் மேல் அதிகமான பிடிப்பு வரும். நாம் யாரோ, இறைவன் யாரோ என்று இருக்காமல் பிடிப்புடன் இறைவனை வழிபட வேண்டும்.இன்றைக்கு ஜோதிடர் சொன்னால் தான் கோயிலுக்கே போகின்றனர். அந்த அளவிற்கு நிலமை இருக்கிறது. அப்படி இருக்க கூடாது. கஷ்டம் நீங்கனும் என்பதற்காக மட்டும் தான் கோயிலுக்கு செல்கின்றனர். அப்படி இருக்க கூடாது. பக்தி என்பது உண்மையான அன்பு.
வணங்க வேண்டும்
இறைவனை பிடித்திருப்பதை இன்னும் திடமாக பிடிக்கத்தான் இதுபோன்று சொற்பொழிவு மூலம் கதைகள் சொல்கிறோம். சிறந்த பக்தி மதுர பக்தி என்னும் பிரம்ம பக்தி தான். தெய்வத்தை நாயகனாக நினைக்கும் பக்தி இது. நம்மால் நிச்சயமாக ஐந்தில் மூன்று பக்திகளை மிக எளிதாக கடைபிடிக்க முடியும். அதுவும் இறைவனை நண்பராக நினைக்கும் பக்தி நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.பத்து பேர் நம்மை சுற்றி இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கஷ்டம் வந்தால் மூளை வேலை செய்யாது. நல்ல காலத்தில் மட்டும் தான் நமக்கு மூளை வேலை செய்யும். காலத்துக்கு தான் புத்தி வேலை செய்யும். உடம்பை நம்ப முடியாது. யாரையும் நம்ப கூடாது. பகவானை மட்டும் தான் நம்ப வேண்டும். அன்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும். நம்பிக்கை பகவானிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அப்பா, அம்மா புண்ணியம் செய்தால் பிறக்கும்.வசதி இருந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. அப்பா, அம்மாவை வணங்கி அவர்களை நல்ல படியாக வைத்திருந்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும். குழந்தைகள் கட்டாயம் அப்பா, அம்மாவை வணங்க வேண்டும். அதே போல் வெ ளியில் செல்லும் போது கட்டாயம் திருநீறோ, குங்குமமோ ஏதாவது நெற்றியில் அணிந்து செல்ல வேண்டும். நெத்தியில் குங்குமமோ, விபூதியோ பூசிச் சென்றால் அகால மரணம் வரவே, வராது. அப்பா, அம்மாவை குழந்தைகள் கட்டாயம் நமஸ்காரம் செய்ய வேண்டும் இவ்வாறு விட்டல்தாஸ் சுவாமிகள் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
மகாராஷ்டிராவில் 60 மாவோயிஸ்டுகள் சரண்
14 Oct 2025மும்பை : மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தளபதி உள்பட 60 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
-
ராணாவுக்கு கம்பீர் ஆதரவு
14 Oct 2025சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்ய
-
மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
14 Oct 2025புதுடெல்லி : மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
அருண்ஜெட்லி...
-
அ.தி.மு.க. 54-வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்
14 Oct 2025சென்னை : அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-10-2025.
15 Oct 2025 -
இந்திய வீராங்கனை ‘சாம்பியன்’
14 Oct 2025ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள யோகோஹமாவில் நடந்தது.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு: ஐகோர்ட்
14 Oct 2025சென்னை : தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி முன்னாள் ஐ.பி.எஸ்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
நாளை வெளியாகும் டியூட்
15 Oct 2025அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’.
-
விக்ரம் பிரபு அக்ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை
15 Oct 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச்
-
நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகும் டீசல்
15 Oct 2025தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.
-
மைலாஞ்சி பட இசை வெளியீட்டு விழா
15 Oct 2025அஜயன் பாலா இயக்கத்தில் மாடம் பட நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படம் மைலாஞ்சி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்
15 Oct 2025புதுடெல்லி : நடைபெறவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
-
கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலை: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு பதில்
15 Oct 2025சென்னை, சட்டசபையில் 2-ம் நாள் அவர்வில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள