எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனிதர்கள் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் அப்பா, அம்மாவை தினமும் வணங்க வேண்டும். வெ ளியில் செல்லும் போது நெற்றியில் திருநீரோ, குங்குமமோ அணிந்து சென்றால் அகால மரணத்திற்கு வாய்ப்பே கிடையாது என்று துாத்துக்குடியில் விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் தெரிவித்தார்.
சொற்பொழிவு
துாத்துக்குடியில் விட்டல் தாஸ் மகராஜ் சுவாமிகளின் பாண்டுரங்கன் கதை குறித்த பக்தி சொற்பொழிவு மற்றும் பஜனை துவங்கியது. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பஜனை சொற்பொழிவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
விட்டல்தாஸ் மகராஜ் சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது;
இன்றைக்கு இரண்டு மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வம்புகதை தான் அதில் அதிகமாக இருக்கிறது. அதுவும் அடுத்தவரை பற்றி பேசுவதில் அதிக சுகம். அதனை தான் பேசுகின்றனர். அப்படி பேசுவதை விடுத்து கோவிந்தா என்று சொன்னால் மனமும் சுகப்படும். நல்ல துாக்கமும் வரும்.கஷ்டம் வந்தால் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லக் கூடாது. பகவானிடம் நமது கஷ்டத்தை சொன்னால் மட்டும் தான் தீர்வு கிடைக்கும். கஷ்டமும் நீங்கும். மனைவி, குழந்தைகளிடம் கூட கஷ்டத்தை சொல்ல கூடாது. நண்பரிடம் சொல்லலாம். பகவானை நண்பராக நினைத்து சொல்லிவிட்டால் கஷ்டம் தானாக நீங்கி விடும். அறைக்கதவை சாத்திவிட்டு நம் கஷ்டத்தை மனசார நினைக்காமல் வாய்விட்டு பகவானிடம் சொல்ல வேண்டும். கடவுளிடம் நாம் வாய்விட்டு கஷ்டத்தை சொன்னால் நிச்சயமாக அந்த கஷ்டம் தீரும். பட்டம், பதவி தேவையில்லை. கஷ்டம் நீங்கினால் போதும் என்று பகவானை தரிசிக்க வேண்டும். இறைவனை வழிபடுவதற்கு சாஸ்திரங்கள் ஐந்து வகையான பக்திகளை சொல்லி இருக்கிறது. சம்மந்தம் இருந்தால் தான் உறவு வரும். இதனால் இறைவனை மனதார நினைத்து வணங்க வேண்டும். நமக்கு உறவு இருந்தால் தான் அதன் மேல் அதிகமான பிடிப்பு வரும். நாம் யாரோ, இறைவன் யாரோ என்று இருக்காமல் பிடிப்புடன் இறைவனை வழிபட வேண்டும்.இன்றைக்கு ஜோதிடர் சொன்னால் தான் கோயிலுக்கே போகின்றனர். அந்த அளவிற்கு நிலமை இருக்கிறது. அப்படி இருக்க கூடாது. கஷ்டம் நீங்கனும் என்பதற்காக மட்டும் தான் கோயிலுக்கு செல்கின்றனர். அப்படி இருக்க கூடாது. பக்தி என்பது உண்மையான அன்பு.
வணங்க வேண்டும்
இறைவனை பிடித்திருப்பதை இன்னும் திடமாக பிடிக்கத்தான் இதுபோன்று சொற்பொழிவு மூலம் கதைகள் சொல்கிறோம். சிறந்த பக்தி மதுர பக்தி என்னும் பிரம்ம பக்தி தான். தெய்வத்தை நாயகனாக நினைக்கும் பக்தி இது. நம்மால் நிச்சயமாக ஐந்தில் மூன்று பக்திகளை மிக எளிதாக கடைபிடிக்க முடியும். அதுவும் இறைவனை நண்பராக நினைக்கும் பக்தி நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும்.பத்து பேர் நம்மை சுற்றி இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கஷ்டம் வந்தால் மூளை வேலை செய்யாது. நல்ல காலத்தில் மட்டும் தான் நமக்கு மூளை வேலை செய்யும். காலத்துக்கு தான் புத்தி வேலை செய்யும். உடம்பை நம்ப முடியாது. யாரையும் நம்ப கூடாது. பகவானை மட்டும் தான் நம்ப வேண்டும். அன்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும். நம்பிக்கை பகவானிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அப்பா, அம்மா புண்ணியம் செய்தால் பிறக்கும்.வசதி இருந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. அப்பா, அம்மாவை வணங்கி அவர்களை நல்ல படியாக வைத்திருந்தால் தான் உயர்ந்த நிலைக்கு வர முடியும். குழந்தைகள் கட்டாயம் அப்பா, அம்மாவை வணங்க வேண்டும். அதே போல் வெ ளியில் செல்லும் போது கட்டாயம் திருநீறோ, குங்குமமோ ஏதாவது நெற்றியில் அணிந்து செல்ல வேண்டும். நெத்தியில் குங்குமமோ, விபூதியோ பூசிச் சென்றால் அகால மரணம் வரவே, வராது. அப்பா, அம்மாவை குழந்தைகள் கட்டாயம் நமஸ்காரம் செய்ய வேண்டும் இவ்வாறு விட்டல்தாஸ் சுவாமிகள் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


