எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல், அரசியல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் சரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.
வாரம் 5 முட்டைகள்
பள்ளிகளில் சத்துணவில் முட்டை வழங்குவது தொடர்பாக சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள 1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டையும், அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகளும் மற்றும் பள்ளிச்செல்லும் 6 வயது முதல் 15 வயது வரையிலான (1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை) மாணவ / மாணவியர்களுக்கு வாரம் 5 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம், 69.31 லட்சம் குழந்தைகள் (16 லட்சம் அங்கன்வாடி குழந்தைகள் + 53.31 லட்சம் பள்ளி செல்லும் மாணாக்கர்கள்) பயன்பெற்று வருகின்றனர்.
அதிகமான விலை நிர்ணயம்
2013-ம் ஆண்டிற்கு முன்னர், முட்டை கொள்முதல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. இந்த நடைமுறையில் பின்வரும் குறைபாடுகள் காணப்பட்டன. மாவட்டந்தோறும் மாறுபட்ட விலைகளில் முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட முட்டையின் தரம் நிர்ணயம் செய்யப்படவில்லை. முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்ட விலையில் முட்டைகள் கொள்முதல் விலையினை நிர்ணயம் செய்தனர். விலைக்கு ஏற்றவாறு நிர்ணயிக்காமல் அதிகமான விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டது.
விளம்பரக் கட்டணம் கூடுதல்
ஒப்பந்தம் குறித்தான விளம்பரத்தை மாதம் தோறும் செய்தித்தாளில் வெளியிடுவதால் அதற்கான விளம்பரக் கட்டணம் கூடுதலாக ஏற்பட்டது. மாதம்தோறும் ஒப்பந்தப்புள்ளி கோரும் பொழுது, ஒப்பந்ததாரரிடம் முடிவான முட்டை விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. மேற்காணும் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, அம்மாவின் (மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்) உத்தரவின்படி, அரசாணை (நிலை) எண். 264, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள் 17.10.2012ல் மாநில அளவில் ஒரே ஒப்பந்தபுள்ளி கோரும் முறை நடைமுறை படுத்தப்பட்டது. இந்த அரசாணையின்படி, கீழ்க்கண்ட நடைமுறைகள் தற்போதுவரை பின்பற்றப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.
ஒரே விலையை மட்டுமே ...
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 பிரிவு 31-ன்படியும் மற்றும் விதிகள் 2000-ன் படியும் இயக்குநர் மற்றும் குழு இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் அவர்கள் முட்டைகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு முட்டைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யலாம் எனவும் அக்மார்க் தரத்திலான முட்டைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் மேற்கண்ட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. முட்டை விநியோகஸ்தர்கள் ஒரு வருடத்திற்கான நிலையான ஒரே விலையை மட்டுமே குறிப்பிட வேண்டும். இவ்விலை, சந்தையில் மாதாமாதம் ஏற்படும் விலை மாறுதல்களை கருத்தில் கொண்டு, வருடாவருடம் ஏற்படும் விலை ஏற்றத்தினையும் எதிர் கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும் என அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டும் மொத்தமாக....
அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்காக, ஒரு வாரத்திற்கு தேவையான முட்டைகள் அனைத்தும் அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்கு வாரம் ஒருமுறை மட்டும் மொத்தமாக ஒப்பந்ததாரர்களால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வாரம் 5 நாட்களுக்கு முட்டை வழங்குவதற்காக வாரத்திற்கு இரண்டு முறை சத்துணவு மையங்களுக்கு முட்டைகளை விநியோகம் ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சத்துணவிற்காக கொள்முதல் செய்யப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக முட்டைகளின் மேல் எட்டு வண்ணங்களில் முத்திரை பதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள், கொள்முதல் செய்யப்படும் முட்டைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து சரியான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து இத்திட்டத்தினை அம்மாவின் அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
முட்டைகள் தொடர்ந்து வழங்க...
20.11.2017 மற்றும் 21.11.2017 நாளிட்ட செய்திதாள்களில் “வரலாறு காணாத விலை உயர்வால் தமிழகத்தில் சத்துணவு முட்டை விநியோகத்தில் திடீர் சிக்கல்” என்ற செய்தியும், ‘பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?’ என்ற எதிர்கட்சித் தலைவரின் அறிக்கையும் வந்துள்ளது. ஆனால், இச்செய்திக்கும், அறிக்கைக்கும் மாறாக அனைத்து அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில் எவ்வித தடையுமின்றி முட்டைகள் தொடர்ந்து அரசால் எந்தவித தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் உள்ள முட்டைவிலை உயர்வினால் இத்திட்டத்திற்கு எந்தவித பாதிப்புமின்றி சிறப்பாக செயல்படுத்திட, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அரசியல் செய்யும் நடவடிக்கை...
எனவே எதிர்கட்சித் தலைவர் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்திகள் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கும் தங்கு தடையின்றி சத்துணவுடன் முட்டையும் வழங்கப்படும் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓராண்டுக்கு என ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை ஒப்பந்தப்புள்ளிகளில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விலையில் ஒப்பந்ததாரர்கள் எந்த தொய்வுமின்றி முட்டைகளை விநியோகம் செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை இத்திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல், அரசியல் செய்யும் நடவடிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற