எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் செங்குன்றம் பனையாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த அரிசி ஆலையில் கொத்தடிமைகள் இருப்பதாக சென்னை எழும்பூரில் உள்ள சர்வதேச நீதி குழுமம் தொண்டு நிறுவன நிர்வாகி கிளாடிஸ்பின்னி என்பவருக்கு தகவல் கிடைத்தது. இவர் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியை சந்தித்து கொத்தடிமைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆய்வு
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று அம்பத்தூர் உதவி கலெக்டர் அரவிந்தன், மாதவரம் தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் ரமேஷ், மாதவரம் வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த அரிசி ஆலைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மதுராந்தகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த சேகர்(வயது 45), சரோஜா(வயது 40), விஜய்(வயது 18), பசுபதி(வயது 15), சரவணன்(வயது 12), ரமேஷ்(வயது 36), கார்த்திக்(வயது 32), மஞ்சுளா(வயது 13), பச்சையப்பன்(வயது 10), சந்தோஷ்(வயது 7), வினோத்(வயது 25), அமுலு(வயது 20), விஸ்வா(வயது 10) காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா(வயது 26), மணிமாலா(வயது 22) மற்றும் மாமல்லபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(வயது 50), கஸ்தூரி(வயது 40) ஆகியோரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அவரிடம் நாங்கள் 8 வருடங்களாக இந்த அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறோம். ஒரு ஆளுக்கு ரூ.50 கூலி கொடுக்கப்படுகிறது.
காலை 7 மணிக்கு நெல் அவிக்கும் வேலை செய்ய ஆரம்பித்தால் இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும். சாப்பாடுக்கு பணம் கேட்டால் ஆயிரம், 2 ஆயிரம் என கொடுத்துவிட்டு பொய் கணக்கு எழுதி வொவ்வொருவரும் ரூ.50ஆயிரம் தர வேண்டும் என கணக்கு எழுதி வைத்துள்ளனர். நாங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என உரிமையாளரிடம் கேட்டால் 50ஆயிரம் ரூபாய் வைத்து விட்டு போக வேண்டும் என மிரட்டி வருகிறார். 8 வருடங்களாக நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு சென்றதே கிடையாது. கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட செல்ல அனுமதிப்பது கிடையாது.
அரிசி ஆலை கதவு எப்போதும் மூடியே இருக்கும் என உதவி கலெக்டரிடம் தெரிவித்தனர். அங்கிருந்த 17 பேரும் கொத்தடிமைகளாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களை மீட்டு அம்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று மாலை அவர்கள் அரசு உதவிகளுடன் பாதுகாப்பாக அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொத்தடிமைகளை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொத்தடிமைகளாக நடத்தியது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெருவை சேர்ந்த அரிசி ஆலை குமஸ்தா பாபு(வயது 60) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய அரிசி ஆலை உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது : இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
08 Nov 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கை குறித்து இந்தியா குற்றச்சாட்டியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
கால்மேகி புயலால் கடும் பாதிப்பு: பிலிப்பைன்ஸில் பலி 188 ஆனது
08 Nov 2025மணிலா : பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் ஏற்பட்டது இதில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
08 Nov 2025மதுரை : மத்திய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இதய நோய், புற்றுநோய் இருந்தால் விசா ரத்து - அமெரிக்க அரசு முடிவு
08 Nov 2025வாஷிங்டேன் : இதய நோய், புற்றுநோய் இருந்தால் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.


