முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது.

புதிய குடும்ப அட்டை

இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல்இ வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா முதியோர் உதவித் தொகை காவல்துறை பாதுகாப்புமின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 432 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கட்டுமான தொழிற்பயிற்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்பட்ட திறன் பயிற்சி தேர்வில் வெற்றிப்பெற்ற 63 நபர்களுக்கு சான்றியதழ்களை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், உதவி கலெக்டர் பயிற்சி ஸ்ரீகாந்த்.இ.ஆ.ப., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் துறை) பேபிஇந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு துறை கருணாகரன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து