முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் விநாயகர் தேரோட்டம் 34 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாள்  சிறப்பு அபிஷேகங்களும் , ஆராதனைகளும் அதனை தொடர்ந்து வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

விழாவின் 9ம் திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் அதனை தொடர்ந்து, தேரில் சுவாமி-அம்பாள் வீற்றிருக்க விநாயகர் தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 34 ஆண்டுகளுக்கு பின்னர் திருவாதிரை திருவிழாவில் விநாயகர் தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தேரோட்ட வீதியுலா கோவில் வாசலில் இருந்து கிளம்பி ரதவீதகள் வழியாக வந்து மீண்டும் கோவில் முன்பு முடிவடைந்தது. இதில் கோமதி அம்பிகை மாதர் சங்க அமைப்பாளர் பட்டமுத்து, சுவாமி ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், சைவ மரபினர் மகமை பொது சங்க செயலாளர் திருமலைக்குமார், சாரதிராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், ஆசிரியர் ஆத்திவிநாயகம், திருவாவடுதுறை ஆதின ஆய்வாளர் சீத்தாராமன், கோவில் ஊழியர் கணேசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து