Idhayam Matrimony

சென்னை பர்மாபஜாரில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு பேர்களுக்கு ஆணையர்.விசுவநாதன் பாராட்டு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      சென்னை

சென்னை, பாரீஸ் கார்னர், பர்மாபஜார் பகுதியில் அப்துல்ரசீத், என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வியாசர்பாடியைச் சேர்ந்த அர்ஜுனன், என்பவர் வேலை செய்து வருகிறார்.

விசாரணை

 மேற்படி இருவரும் கடையிலிருந்த போது, கடையின் முன்புறம் உள்ள சாலையில் பணம் கிடந்துள்ளது. இதனை கவனித்த மேற்படி இருவரும் அதை எடுத்து எண்ணி பார்த்த போது மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் அப்துல் ரசீத் வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சாலையில் கிடந்த பணம் ரூ.50 ஆயிரத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த அப்துல் ரசீது மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் .கா.விசுவநாதன், நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார். சாலையில் ரூ.50 ஆயிரத்தை தொலைத்த நபர்கள் பற்றி வடக்கு கடற்கரை ஆய்வாளர் விசாரணை செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து