எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர்மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தினை பயனாளிகளுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் முன்னிலையில் கலெக்டர் வே.ப. தண்டபானி வழங்கினார்
அம்மா இருசக்கர வாகன திட்டம்
இவ்விழாவில் கலெக்டர் வே.ப. தண்டபானி, தெரிவித்ததாவது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிந்தனைத் திட்டமான உழைக்கும் மகளிருக்கு மான்ய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா” தொடக்கம் இன்று ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் போராடி வரும் உழைக்கும் மகளிர் வெகுதூரம் நடந்து சென்றும், பேருந்துகளில் சென்றும் பணிக்குச் செல்வதில் உள்ள இன்னல்களை போக்க வேண்டிய உயர் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குட்பட்டு ஊதியம் ஈட்டும் உழைக்கும் மகளிருக்கு உரியது இத்திட்டம்.இவ்வுன்னதமான திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர் வேலைக்குச் செல்லும் பயணத் தொலைவை எளிதில் அடையவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பணிக்கு சென்றடையவும் மற்றும் தாமாக உற்பத்தி செய்த பொருட்களை வெளி இடங்களுக்குச் சென்று விற்று வாழ்வாதார மேம்பாடு அடையவும், 50மூ அல்லது ரூ. 25,000- இவற்றில் எது குறைவோ அதற்கான மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் 2017-18 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.கடலூர் மாவட்டத்திற்கு, இந்த ஆண்டு 3705 உழைக்கும் மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 2552 மகளிரும், நகர்ப்புறப் பகுதிகளில் 1153 மகளிரும் நடப்பாண்டில் பயன் பெறவுள்ளனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 815 மகளிர் பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் 4மூ மகளிர் பயன் பெறும் வகையில் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22.01.2018 முதல் 10.02.2018 முடிய இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 10514 மகளிர், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களால் உரிய வகையில் கள சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2018 அன்று சென்னையில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா இங்கு இனிதாக நடைபெற்று வருவதில் மகிழ்வடைகிறேன். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 110 பயனாளிகள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் இப்பகுதியைச் சார்ந்த 48 உழைக்கும் மகளிருக்கு இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதில் பெருமகிழ்வு கொள்வதுடன் அத்தனை பயனாளிகளும் தங்கள் வாழ்வில் மென்மேலும் வாழ்வாதார மேம்பாடு காண வாழ்த்துகிறேன்.இவ்வாகனத்தை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிற நபரிடம் விற்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ இயலாது. இன்று வழங்கப்படும் இவ்வாகனம் உங்களுக்கானது. அரசின் உதவியுடன் வழங்கப்பட்டது இவ்வாகனம் என்பதை பயனாளிகள் எண்ணி செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் வழங்கியுள்ள ஒதுக்கீட்டில் எஞ்சியுள்ள 3595 பயனாளிகளும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் ஒப்புதலுடன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் மான்ய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இத்திட்ட பயனாளிகள், அரசின் இந்த சிறப்பு சலுகையினால் பெற்றுள்ள வாகனங்களைக் கொண்டு பயணத்தை எளிமையாக்கி கொள்ளவும், உழைப்பை மேம்படுத்தி வாழ்வில் உயரிய பொருளாதார நிலையை அடைந்திடவும் என் சார்பிலும், இங்கு வந்து வாழ்த்தியோர் அனைவரின் சார்பிலும் மீண்டும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மகளிர் திட்ட இணை இயக்குநர் திட்ட இயக்குநர் இரா. இராஜசேகர் வரவுற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் திட்ட இயக்குநர் பெ. ஆனந்ராஜ், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை. ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெ.விஜயகுமார், கே. இராஜ்குமார், எஸ். இரமேஷ்பாபு, டி. சத்தியமூர்த்தி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்மந்தம், காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விமலா, கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வராஜ், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுகுமார் மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சு. ஆறுமுகம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.