எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர்மாவட்டம் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனத்தினை பயனாளிகளுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் முன்னிலையில் கலெக்டர் வே.ப. தண்டபானி வழங்கினார்
அம்மா இருசக்கர வாகன திட்டம்
இவ்விழாவில் கலெக்டர் வே.ப. தண்டபானி, தெரிவித்ததாவது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய சிந்தனைத் திட்டமான உழைக்கும் மகளிருக்கு மான்ய விலையில் ‘அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா” தொடக்கம் இன்று ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் போராடி வரும் உழைக்கும் மகளிர் வெகுதூரம் நடந்து சென்றும், பேருந்துகளில் சென்றும் பணிக்குச் செல்வதில் உள்ள இன்னல்களை போக்க வேண்டிய உயர் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்குட்பட்டு ஊதியம் ஈட்டும் உழைக்கும் மகளிருக்கு உரியது இத்திட்டம்.இவ்வுன்னதமான திட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர் வேலைக்குச் செல்லும் பயணத் தொலைவை எளிதில் அடையவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பணிக்கு சென்றடையவும் மற்றும் தாமாக உற்பத்தி செய்த பொருட்களை வெளி இடங்களுக்குச் சென்று விற்று வாழ்வாதார மேம்பாடு அடையவும், 50மூ அல்லது ரூ. 25,000- இவற்றில் எது குறைவோ அதற்கான மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்கள் 2017-18 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.கடலூர் மாவட்டத்திற்கு, இந்த ஆண்டு 3705 உழைக்கும் மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் மான்யத்துடன் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் 2552 மகளிரும், நகர்ப்புறப் பகுதிகளில் 1153 மகளிரும் நடப்பாண்டில் பயன் பெறவுள்ளனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 815 மகளிர் பயன்பெறுவார்கள். மாற்றுத் திறனாளிகள் 4மூ மகளிர் பயன் பெறும் வகையில் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 22.01.2018 முதல் 10.02.2018 முடிய இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 10514 மகளிர், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் அதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களால் உரிய வகையில் கள சரிபார்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.பாரத பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.02.2018 அன்று சென்னையில் இத்திட்ட தொடக்க விழா நடைபெற்றதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் தொடக்க விழா நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன.கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா இங்கு இனிதாக நடைபெற்று வருவதில் மகிழ்வடைகிறேன். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 110 பயனாளிகள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுள் இப்பகுதியைச் சார்ந்த 48 உழைக்கும் மகளிருக்கு இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதில் பெருமகிழ்வு கொள்வதுடன் அத்தனை பயனாளிகளும் தங்கள் வாழ்வில் மென்மேலும் வாழ்வாதார மேம்பாடு காண வாழ்த்துகிறேன்.இவ்வாகனத்தை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு பிற நபரிடம் விற்கவோ அல்லது உரிமை மாற்றம் செய்யவோ இயலாது. இன்று வழங்கப்படும் இவ்வாகனம் உங்களுக்கானது. அரசின் உதவியுடன் வழங்கப்பட்டது இவ்வாகனம் என்பதை பயனாளிகள் எண்ணி செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் வழங்கியுள்ள ஒதுக்கீட்டில் எஞ்சியுள்ள 3595 பயனாளிகளும் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவின் ஒப்புதலுடன் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் மான்ய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இத்திட்ட பயனாளிகள், அரசின் இந்த சிறப்பு சலுகையினால் பெற்றுள்ள வாகனங்களைக் கொண்டு பயணத்தை எளிமையாக்கி கொள்ளவும், உழைப்பை மேம்படுத்தி வாழ்வில் உயரிய பொருளாதார நிலையை அடைந்திடவும் என் சார்பிலும், இங்கு வந்து வாழ்த்தியோர் அனைவரின் சார்பிலும் மீண்டும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று மகளிர் திட்ட இணை இயக்குநர் திட்ட இயக்குநர் இரா. இராஜசேகர் வரவுற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் திட்ட இயக்குநர் பெ. ஆனந்ராஜ், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை. ரவிச்சந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஆறுமுகம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெ.விஜயகுமார், கே. இராஜ்குமார், எஸ். இரமேஷ்பாபு, டி. சத்தியமூர்த்தி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசன், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்மந்தம், காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) விமலா, கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வராஜ், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுகுமார் மகளிர் திட்ட பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சு. ஆறுமுகம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
06 Jul 2025திருப்புவனம் : திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.