எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம்.
இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது?
மறுதாம்பிலும் வருமானம் : குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்; பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது.
நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்து விடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு, மறுதாம்பு விடக்கூடாது. இது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறையாகும்.
சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும் போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
கிரிக்கெட் மட்டைக்கு குமிழ் : குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் மெலைனா ஆர்போரியா. இதன் தாயகம் இந்தியா. தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமன்கள் என பலவாறாக பயன்படுகிறது குமிழ். இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது.
அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால், மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இதுவரை நாம் பேசிக்கொண்டு இருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போம்.
மூணு வருஷம்தான் பராமரிப்பு : ‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.
இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சு இருக்கேன். இப்படி நட்டால் ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சுக்கலாம்.
குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சுட்டால் குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சுடலாம்.
ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா, உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு. இம்மரம் வெர்பனேசி என்ற தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது இதன் தாவரவியல் பெயராகும்.
குமிழ் மரமானது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை இந்தியாவின் எல்லா இடங்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரம் ஆகும். இந்த மரம் அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இம் மரத்தின் விட்டம் 1,2 அடிமுதல் 4 அடி வரை இருக்கும். மரத்தின் உட்பகுதி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும்.
மேலும் இம்மரமானது மியான்மர், தாய்லாந்து, லாவோ, கம்போடியா,வியட்நாம், மற்றும் சீன தெற்குமாகாணங்களில்இயற்கை காடுகளில் காணப்படுகிறது. சியாரா,நைஜீரியா,மலேசியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. களிமண் நிலத்தில் நன்றாக வளரும். தொடர்ந்து நீர்தேங்கும் நிலத்தில் வளராது. வரப்போரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம். ஏராளமானஇலைகளுடன் மரம் அழகாக இருக்கும்.
திறந்த வெளிகளில் காற்றுத்தடுப்பானாகவும் இம்மரத்தை வளர்க்கலாம். மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் மட்கி அந்த நிலத்தை வளப்படுத்தும். வறட்சியை தாங்கும் இயல்புடையன. இம்மரமானது பட்டு புழுக்களுக்கு உணவாகவும்,கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆனால், முழுமையாக 6 ம் ஆண்டில் தான் முழுமையாக பூக்கும். குமிழ் மர பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து வேளாண் பெருங்குடி மக்கள் உபரி வருமானம் தொடர்ந்து பெறலாம்.
சாதாரண ஏழை எளிய மக்களும் கூட 10 குமிழ் தேக்கு மரங்களை நட்டு தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம். ஏக்கருக்கு 6-க்கு 6 இடைவெளியில் 1200 மரங்கள் வரை வளர்க்கலாம். குமிழ் மரம் 1 டன் விலை ரூ.8500- ஆகும். 7-8 வருடத்தில் ஒரு மரமானது சிறப்பான பராமரிப்பு செய்தால் 1.5 டன் எடை குறையாமல் கிடைக்கும். குமிழ் மரத்தின் பயனானது தேக்கு மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறதோ, அதற்கெல்லாம் குமிழ் மரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம், குமிழ் மரமும் தேக்குமரத்தின் ஒரு வகைதான். ஒரு டன் குமிழ் மரத்தில் 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். மற்றவகை தேக்குமரங்களில் மரங்களில் 12 கன சதுர அடி பலகை மட்டுமே கிடைக்கும்.
பலகைகள் லேசாக இருக்கும் ஆனால் உறுதியானவை. நீடித்து உழைக்கும். 25 முதல்30 ஆண்டுகள் விளைந்த தேக்கு மரத்தின் உறுதியை போன்று 7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் உறுதி தன்மை இருக்கும். குமிழ் மரம் மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற சிறந்த மரமாக விளங்குகிறது. கைவினைப்பொருட்கள்,மரச்சாமான்கள், பர்னிச்சர்கள், தீப்பெட்டி, பிளைவுட்,பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், சோபா செட்டுகள்,சோகேஸ்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கை,கால் தயாரிக்க பயன்படுகிறது. 15 வயது மரத்திலிருந்து ஒரு மாதத்தில் 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 1000 குமிழ் விதைகள் இருக்கும். தற்போது ஒருகிலோ குமிழ் விதை ரூ.750-க்கு விற்கப்படுகிறது. ஆர்வமுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் குறைந்த பட்சம் 20 மரங்களை 15 ஆண்டுகள்வளர்த்தால் விதைகள் 200 கிலோ விதைகள்; கிடைக்கும். குமிழ் மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது.
எஸ்.பாலமுருகன், சிவகங்கை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
12 Mar 2026சென்னை, குற்ற வழக்கு தொடர்வு துறை தேர்வான 45 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
12 Mar 2026சென்னை, சென்னையில் வருகிற 15-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இப்தார் விருந்து வழங்குகிறார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: 2 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
12 Mar 2026ராமேஸ்வரம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கை
-
பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற புதிய திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Mar 2026சென்னை, பெரம்பலூர் மாவட்டத்தில் 34.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 411 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 44.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 315 புதிய திட்டப் பணிகளுக்
-
ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்
12 Mar 2026சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட ஓ.டி.டி. உரிமம் ஒப்பந்தம் ரத்தால் மேலும் சிச்கல்
12 Mar 2026சென்னை, ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் ஒப்பந்தத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ம
-
யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
12 Mar 2026புதுடெல்லி, யு.ஏ.இ.-லிருந்து குஜராத் நோக்கி வந்த வர்த்தக கப்பல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக இந்தியா வந்த எண்ணெய்க் கப்பல்
12 Mar 2026மும்பை, ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து முதல்முறையாக சவுதி அரேபியாவில் இருந்து மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் வந்தடைந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை: த.வெ.க. தலைவர் விஜய் காட்டம்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் பாதுகாப்பு என்பதே எங்கும் இல்லை என்ற நிலை உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்
12 Mar 2026சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
12 Mar 2026சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
12 Mar 2026சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது.
-
சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் 3 நிபந்தனைகள்
12 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
-
பெட்ரோல் -டீசல் தட்டுப்பாடு என வதந்தி: எரிபொருள் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளாள் பரபரப்பு..!
12 Mar 2026சென்னை, 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியதால், அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோ
-
மிரட்டி, பணம் கொடுத்து வாங்க முடியாத ஒரே தலைவர் விஜய்தான்: ஆதவ் அர்ஜூனா பேச்சால் பரபரப்பு
12 Mar 2026சென்னை, எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது த.வெ.க.
-
வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்கு - கப்பல்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலால் பதற்றம்
12 Mar 2026தெஹ்ரான், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
12 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
விவசாயிகளின் வருமானம் தொடர்பான பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி என்னவானது...? அமைச்சர் ரகுபதி கேள்வி
12 Mar 2026சென்னை, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்னவானது? என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கற்பனையே: எடப்பாடி பழனிசாமி மீண்டும் விளக்கம்
12 Mar 2026திருச்சி, த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று.
-
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: சென்னையில் டீ, காபி விலை உயர்வு: மக்கள் கடும் அதிர்ச்சி
12 Mar 2026சென்னை, வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
பிரதமரையும் காணவில்லை, சிலிண்டரையும் காணவில்லை; பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்
12 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற வளாகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்த்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை; குற்றவாளிகளை பிடிப்பதற்கு ஆறு தனிப்படைகள் அமைப்பு: நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தகவல்
12 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் த
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Mar 2026- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சிராஜ அலங்காரம்.
-
இன்றைய நாள் எப்படி?
12 Mar 2026


