எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம்.
இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது?
மறுதாம்பிலும் வருமானம் : குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். மூன்று மாதம் வரை வாரம் ஒரு முறையும்; பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் என நீர்பாய்ச்சுவது நல்லது.
நடவு செய்த ஓராண்டில், 10 அடி உயரம் வரை வளர்ந்து விடும். முதல் மூன்று ஆண்டுகள் வரை கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும். முறையாக கவாத்து செய்யாவிட்டால், மரம் நேராக வளராது. நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். ஒரு டன் குறைந்தபட்சம் 7,000 ரூபாய்க்கு விற்பனையாவதாக வைத்துக்கொண்டாலும், ஒரு ஏக்கரில் உள்ள 200 மரங்கள் மூலம் 14 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும். அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும். இதற்குப் பிறகு, மறுதாம்பு விடக்கூடாது. இது வனத்துறை பரிந்துரை செய்யும் சாகுபடி முறையாகும்.
சில விவசாயிகள் 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகளைக்கூட நடுகிறார்கள். இந்த முறையில் சாகுபடி செய்யும் போது, 5-ம் ஆண்டில் ஒரு மரம் விட்டு, ஒரு மரம் என்று அறுவடை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 200 மரங்கள் கிடைக்கும். இதை விற்பனை செய்தால் தலா 1,500 ரூபாய் வீதம் 3,00,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். மீதமுள்ள 200 மரங்களை 10-ம் ஆண்டில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வீதம் 200 மரங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
கிரிக்கெட் மட்டைக்கு குமிழ் : குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் மெலைனா ஆர்போரியா. இதன் தாயகம் இந்தியா. தீப்பெட்டி, தீக்குச்சி, பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமன்கள் என பலவாறாக பயன்படுகிறது குமிழ். இதைத் தனிப்பயிராக சாகுபடி செய்ய வாய்ப்பில்லாத விவசாயிகள், வரப்பு, வாய்க்கால், வேலி ஓரங்கள், ஓடை, காலி இடங்கள் என கைவசம் இருக்கும் இடமெல்லாம் நடவு செய்யலாம். குமிழ் சாகுபடியைப் பொறுத்தவரை கவாத்தும், பாசனம் மட்டும்தான் பராமரிப்பு, இதைச் சரியாக செய்யாவிட்டால் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது.
அவ்வப்போது கம்பளிப்புழு தாக்குதல் இருக்கும், அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என தோன்றினால், மூலிகைப் பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இதுவரை நாம் பேசிக்கொண்டு இருந்தது குறைந்தபட்ச கணக்கு. இனி, குமிழ் சாகுபடியில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சொல்வதைக் கேட்போம்.
மூணு வருஷம்தான் பராமரிப்பு : ‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் குமிழ் மாதிரி குறைஞ்ச காலத்துல அதிக வருமானம் கொடுக்குற மரம் எதுவும் இல்லீங்க. 7 முதல் 10 வருஷத்துக்குள்ள ஒரு மரம் ஒரு டன் எடை வந்துடுது. 10 வருஷத்துக்கு முன்ன 30 சென்ட் நிலத்துல 9 அடிக்கு 9 அடி இடைவெளியில குமிழை நடவு செஞ்சிருந்தேன். கவாத்து அடிச்சு, முறையா தண்ணி கொடுத்து பாத்துகிட்டதால மரங்க நல்லா வளந்திருக்கு. அதுல வேலியோரமா இருந்த நாலஞ்சு மரங்களை போன வருஷம் வெட்டி வித்தேன். ஒவ்வொரு மரமும் ஒன்றரை டன் எடை இருந்துச்சு. ஒரு டன் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதால, மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிச்ச மரங்களை இன்னும் வெட்டாம வெச்சிருக்கேன்.
இந்த மரத்துக்கு இருக்குற டிமாண்டை பாத்துட்டு ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன, செடிக்கு செடி 14 அடி, வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளியில ரெண்டரை ஏக்கர்ல நடவு செஞ்சு இருக்கேன். இப்படி நட்டால் ஏக்கருக்கு 220 கன்றுகள் வரைக்கும் தேவைப்படும். முதல் வருஷம் வரைக்கும் ஊடுபயிரா கடலை, உளுந்துனு மாறி, மாறி ஊடுபயிர் செஞ்சுக்கலாம்.
குமிழைப் பொறுத்தவரைக்கும் 20 அடி உசரத்துக்கு மரம் போற வரைக்கும் கவாத்து எடுக்கணும். அதுக்கு மேல தேவையில்லை. அதேபோல முதல் ரெண்டு, மூணு வருஷம் வரைக்கும் முறையா தண்ணி கொடுத்து பராமரிக்கணும். இதையெல்லாம் செஞ்சுட்டால் குமிழ்ல நல்ல மகசூலை எடுத்துடலாம். நடவு செஞ்ச 7-ம் வருஷத்துல இருந்து 10-ம் வருஷத்துக்குள்ள அறுவடை செஞ்சுடலாம்.
ஒரு மரத்துக்கு சராசரி விலையா 10 ஆயிரம் கிடைச்சாலும், ஒரு ஏக்கர்ல 200 மரத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வருமானமா கிடைக்கும். விற்பனையிலயும் பிரச்னையில்ல. உங்ககிட்ட குமிழ் மரம் இருக்கறது தெரிஞ்சா, உள்ளூர் வியாபாரிகளே வந்து பணம் கொடுத்து வெட்டிக்கிட்டு போயிடுவாங்க. அந்தளவுக்கு இதுக்கு டிமாண்ட் இருக்கு. இம்மரம் வெர்பனேசி என்ற தேக்கு மரக் குடும்பத்தைச் சார்ந்தது. மெலினா ஆர்போரியா என்பது இதன் தாவரவியல் பெயராகும்.
குமிழ் மரமானது கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை இந்தியாவின் எல்லா இடங்களிலும் இயற்கையாக வளரக்கூடிய ஒரு இலையுதிர் மரம் ஆகும். இந்த மரம் அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். இம் மரத்தின் விட்டம் 1,2 அடிமுதல் 4 அடி வரை இருக்கும். மரத்தின் உட்பகுதி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும்.
மேலும் இம்மரமானது மியான்மர், தாய்லாந்து, லாவோ, கம்போடியா,வியட்நாம், மற்றும் சீன தெற்குமாகாணங்களில்இயற்கை காடுகளில் காணப்படுகிறது. சியாரா,நைஜீரியா,மலேசியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. களிமண் நிலத்தில் நன்றாக வளரும். தொடர்ந்து நீர்தேங்கும் நிலத்தில் வளராது. வரப்போரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் நட்டு வளர்க்கலாம். ஏராளமானஇலைகளுடன் மரம் அழகாக இருக்கும்.
திறந்த வெளிகளில் காற்றுத்தடுப்பானாகவும் இம்மரத்தை வளர்க்கலாம். மரங்களிலிருந்து கீழே விழும் இலைகள் மட்கி அந்த நிலத்தை வளப்படுத்தும். வறட்சியை தாங்கும் இயல்புடையன. இம்மரமானது பட்டு புழுக்களுக்கு உணவாகவும்,கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். ஆனால், முழுமையாக 6 ம் ஆண்டில் தான் முழுமையாக பூக்கும். குமிழ் மர பூக்களில் அதிக தேன் உள்ளதால் இம்மரத் தோப்புகளில் தேனீக்கள் வளர்த்து வேளாண் பெருங்குடி மக்கள் உபரி வருமானம் தொடர்ந்து பெறலாம்.
சாதாரண ஏழை எளிய மக்களும் கூட 10 குமிழ் தேக்கு மரங்களை நட்டு தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம். ஏக்கருக்கு 6-க்கு 6 இடைவெளியில் 1200 மரங்கள் வரை வளர்க்கலாம். குமிழ் மரம் 1 டன் விலை ரூ.8500- ஆகும். 7-8 வருடத்தில் ஒரு மரமானது சிறப்பான பராமரிப்பு செய்தால் 1.5 டன் எடை குறையாமல் கிடைக்கும். குமிழ் மரத்தின் பயனானது தேக்கு மரம் எதற்கெல்லாம் பயன்படுகிறதோ, அதற்கெல்லாம் குமிழ் மரத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம், குமிழ் மரமும் தேக்குமரத்தின் ஒரு வகைதான். ஒரு டன் குமிழ் மரத்தில் 18 கன சதுர அடி பலகை கிடைக்கும். மற்றவகை தேக்குமரங்களில் மரங்களில் 12 கன சதுர அடி பலகை மட்டுமே கிடைக்கும்.
பலகைகள் லேசாக இருக்கும் ஆனால் உறுதியானவை. நீடித்து உழைக்கும். 25 முதல்30 ஆண்டுகள் விளைந்த தேக்கு மரத்தின் உறுதியை போன்று 7-8 ஆண்டுகள் விளைந்த குமிழ் மரத்தில் உறுதி தன்மை இருக்கும். குமிழ் மரம் மர வேலைப்பாடுகளுக்கு ஏற்ற சிறந்த மரமாக விளங்குகிறது. கைவினைப்பொருட்கள்,மரச்சாமான்கள், பர்னிச்சர்கள், தீப்பெட்டி, பிளைவுட்,பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், சோபா செட்டுகள்,சோகேஸ்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கை,கால் தயாரிக்க பயன்படுகிறது. 15 வயது மரத்திலிருந்து ஒரு மாதத்தில் 10 கிலோ குமிழ் விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 1000 குமிழ் விதைகள் இருக்கும். தற்போது ஒருகிலோ குமிழ் விதை ரூ.750-க்கு விற்கப்படுகிறது. ஆர்வமுள்ள வேளாண் பெருங்குடிமக்கள் குறைந்த பட்சம் 20 மரங்களை 15 ஆண்டுகள்வளர்த்தால் விதைகள் 200 கிலோ விதைகள்; கிடைக்கும். குமிழ் மரம் வளர்ப்பிற்கு மத்திய அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது.
எஸ்.பாலமுருகன், சிவகங்கை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
12 Dec 2025மதுரை, ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது என்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 12-12-2025
12 Dec 2025 -
75-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2025சென்னை, ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11,718 கோடி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
12 Dec 2025புது டெல்லி, வரும் 2027 மார்ச் 1-ல் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
12 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொ
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு டிச. 15-ல் பிரதமர் மோடி பயணம்
12 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு கொண்டு போய் விடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
12 Dec 2025வாஷிங்டன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் போர் தொடர்ந்தால் இந்த விவகாரம் 3-ம் உலக போருக
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கியது
12 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
12 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மு.க.ஸ்டாலினே மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
ட்ரம்ப் வலது கையில் காயம்...? வெள்ளை மாளிகை விளக்கம்
12 Dec 2025வாஷிங்டன், ட்ரம்ப் வலது கையில் காயம் குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழகம் வருகிறார் அமித்ஷா
12 Dec 2025சென்னை, வரும் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க.
-
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வருவது எப்பொழுது..? இஸ்ரோ தலைவர் தகவல்
12 Dec 2025நெல்லை, 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
பல தலைமுறைகளை கவர்ந்தவர்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து
12 Dec 2025புதுடெல்லி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வணிக ரீதியிலான அமெரிக்க செயற்கைக்கோள் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
12 Dec 2025திருப்பதி, வரும் 15-ம் தேதி அமெரிக்க செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
ஆந்திரா: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி: பிரதமர் இரங்கல் -நிதியுதவி அறிவிப்பு
12 Dec 2025ஐதராபாத், ஆந்திரத்தில் கோவிலுக்குச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் லேசான மழை பெய்ய வாய்ப்பு
12 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவுதி அரேபியாவில் இனி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை
12 Dec 2025துபாய், முதல்முறையாக சவுதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
சட்டசபை கூட்டத்தொடர் முடித்துவைப்பு
12 Dec 2025சென்னை, கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை முடித்துவைப்பதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளா
-
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 10 நிமிடம்
12 Dec 2025சென்னை, நடிகர் ரஜினிகாந்த்தின் திரை வாழ்வைப் பலப்படுத்திய திரைப்படம் அபூர்வ ராகங்கள்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


