எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருண்ஸ் மஹாலில் டாக்டர் அம்பேத்கர் 127வது பிறந்த நாள் மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா நடைபெற்றது.
சமூக நல்லிணக்க நாள் விழா
இவ்விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, , கலந்து கொண்டு, 58 பயனாளிகளுக்கு ரூ.80 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், கலெக்டர் பேசியதாவது-இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நல்லிணக்க நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர். டாக்டர் அம்பேத்கர் அமெரிக்கா மற்றும் லண்டனில் படித்து பட்டயம் பெற்றவர். பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்ற மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவங்குவதற்கு வித்திட்டவர். அரசு பணியாளர்களுக்கு எட்டு மணி நேரம் பணி மற்றும் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், பெண்களுக்கான சொத்து உரிமைகள் போன்ற பல்வேறு சட்ட முன்வடிவுகளை இயற்றியவர். எனவே, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளினை நாடு முழுவதும் சமூக நல்லிணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் மே 5ம் தேதி வரை 15 நாட்களுக்கு கிராம சுயாட்சி இயக்கத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்களில் அரசின் முக்கியமான திட்டங்கள் தன்னிறைவு அடையும் சிறப்பு முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. அக்கிராமங்களில் 100 சதவிதம் மின் வசதி செய்தல், அனைத்து வீடுகளுக்கும் எல்ஈடி விளக்குகள் வழங்குதல், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நபர்களை கண்டறிந்து, சுகாதாரத் துறையினர், அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்வார்கள். இத்திட்டத்தில் தூய்மை பாரத இயக்கம், தனிநபர் கழிப்பறை உபயோகித்தல், சுகாதாரம், அனைத்து விதமான அரசின் திட்டங்களை 29 கிராம மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற சமுக நல்லிணக்க நாள் விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.17.10 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.41.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், சமூக நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.11.26 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் ரூ.69.65 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,, வழங்கினார். மேலும், கலெக்டர் , சமூக நலத்துறையின் மூலம் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்த 6 தம்பதியினர்களுக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 6 சமூக ஆர்வலர்களுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மாநில அளவில் சிறந்த ஆதிதிராவிடர் நல பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிட நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராமமாக துரைச்சாமியாபுரத்தை தேர்வு செய்து, கிராமத் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர்களை பொன்னாடை அணிவித்து கௌரவித்து, ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். சமூக நல்லிணக்கம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாவட்ட தாட்கோ மேலாளர் மாரிமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கஜேந்திரநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பாளர் பெனிட் ஆசிர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.