முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் மனிதவள மேலாண்மைத்திட்ட பயிற்சி வகுப்பு அரசு முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 29 மே 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரியில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்ட பயிற்சி வகுப்பினை அரசு முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து அரசு முதன்மைச் செயலர் பேசியதாவது,
தமிழக அரசு உத்தரவின்படி, நிதி மேலாண்மை தொடர்பான அரசுப்பணிகள் திறம்பட செயல்பட மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலை தள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வுதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ரூ.288.91 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்சமயம் நிறைவுற்றுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இத்திட்டம் அக்டோபர் 2018 முதல் நடைமுறைப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப்பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினிமயமாகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 16,403 அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்திட நான்கு நாட்கள் பயிற்சி குறிப்பிட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக இரண்டு நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் நடத்தப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பட்டியல்கள் தயாரித்தல், மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாகவும், கருவூத்துறை அலுவலர்களுக்கு பட்டியல் கடவு செய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத்தாட்கள் மேலாண்மை, மின் அலுவலகம், ஓய்வூதியம் வழங்கல் மற்றும இதர இனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  கடந்த 2017-18-ம் நிதியாண்டில் தேனி மாவட்டத்தில் ரூ.436 கோடி ஓய்வூதியாமகவும், அரசு ஊழியர்களுக்கு ரூ.921 கோடி ஊதியமும், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின்  வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் ரூ.845 கோடி அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என அரசு முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.
 இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரினக்காப்பாளர் கலாநிதி, சென்னை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் மகாபாரதி, மதுரை மண்டல இணை இயக்குநர் முனைவர் முத்துப்பாண்டியன் , தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  வசந்தி , வருவாய் கோட்டாட்சியர்கள் சென்னியப்பன் ,  ஜெயப்ரிதா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் , மாவட்ட கருவூல அலுவலர் சீதாராமன் உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து