முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய பதவிக் காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. சம்மன் - விசாரணை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 மாதம்... இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியிருந்தார். வரும் 24ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் முடியும் நிலையில், மேலும் 4 மாத காலம் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக 4 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து