முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட லூர் நகராட்சி ஆணையாளர் பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை.

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 கம்பம் - தேனி மாவட்டம் கூட லூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் பள்ளியில் சேகரமாகும்  குப்பையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தினார்.கூட லூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார்.சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார் முன்னிலை வகித்தார்.கூட லூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனைக் கூட்த்தில் பள்ளிகளில் மாணவர்கள் மூலம் தினந்தோறும் ஏராளமான குப்பை வெளியேறுகிறது.இதனால் ஓவ்வொரு பள்ளியிலும் சேமிப்பு கிடங்கு ஏற்படுத்தி அங்கு உரமாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் சானிட்டரி,நாப்கின்,எரிக்கும் மெஷின் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.தினந்தோறும் காலையில் பள்ளி துவங்குவதற்கு முன் அனைத்து மாணவர்களும் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதி மொழி எடுக்கவும் ஆலாசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து