எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் முன்னிலையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. அப்போது மாவட்;ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 123 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 28 அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 26 அலுவலர்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 34 அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 35 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடவடிக்கைகளில் சுமுகமான வாக்குப்பதிவிற்கு மண்டல அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அதனடிப்படையில், தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து மண்டல அளவிலான அலுவலர்களுக்கும் முதற்கட்ட பயிற்சி நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் இரண்டாம் கட்ட பயிற்சி நடத்தப்படுகின்றது. மண்டல அலுவலர்களுக்கான முக்கிய பொறுப்புகளை பொறுத்த வரையில் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடன், தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய வாக்காளர் பட்டியல் சென்று சேர்ந்துள்ளதாக என்பதை உறுதி செய்திட வேண்டும். அதேபோல, தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் அமையப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை முறையே களஆய்வு செய்து அனைத்து மையங்களிலும் சாய்தள வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைக்கான தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்கள் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து பயிற்சிகள் வழங்கி தெளிவுபடுத்திட வேண்டும். அதேபோல, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான படிவங்கள், தளவாட சாமான்கள், கட்டு உரைகள், அழியா மை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் இருப்பினை உறுதி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு முறையே பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, தேர்தல் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குப்பதிவு நேரம் துவங்குவதற்கு முன்பாக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கான மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதோடு, மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நீக்கி உறுதி செய்து சான்றொப்பம் இட வேண்டும். அதன் பின்னரே தேர்தல் வாக்குப்பதிவினை துவங்கிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும்.
அதேபோல, தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சீரான கால இடைவெளியில் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் அனைத்து மண்டல அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழுள்ள வாக்குச்சாவடி மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்களை உரிய முறையில் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்திட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் அந்தந்த மண்டல அலுவலர்களின் முக்கிய பொறுப்பாகும். எனவே மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளின் முக்கியத்துவம் உணர்ந்து விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாற தெரிவித்தார். இப்பயிற்சியில், கூடுதல் தேர்தல் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எஸ்.ராமன் (வருவாய் கோட்டாட்சியர்-பரமக்குடி), எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர்-திருவாடானை தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-முதுகுளத்தூர்), உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்
08 Jul 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது: இ.பி.எஸ்.
08 Jul 2025கோவை : ''அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்ற நம்பிக்கையை நாம் பெற்று இருக்கிறோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள
-
கடலூர் ரயில் விபத்து: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
08 Jul 2025சென்னை : ரயில் விபத்துகள் குறித்து மத்திய அரசுக்கு துளியளவும் கவலையில்லை என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.