எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் அ.தி.மு.க.நிர்வாகி பா.ஜ.க. வேட்பாளரை வரவேற்று ஆதரவளித்ததால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அவரை அரிவாளால் வெட்டியதில் படுகாயடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாலைக்குடி. இந்த ஊர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் முகம்மதுகாசிம்(வயது43). ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் பொருளாளரான இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியை சேர்ந்த யூசுப் என்பவரால் அரிவாளால் வெட்டப்பட்டு இடது கையில் படுகாயமடைந்தார். அதிக ரத்தம் வெளியாகி உயிருக்குஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளித்ததன் பயனாக ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த முகம்மது காசிம் கூறியபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளுடன் எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது நான் எனது குடும்பத்துடனும், இஸ்லாமிய சகோதரர்களுடனும் சென்று சிறப்பான வரவேற்பு அளித்து ஆதரவை தெரிவித்தோம். இதனை பொறுக்க முடியாமல் பா.ஜ.க. வேட்பாளருக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்று விரோதம் கொண்டு தி.மு.க.வை சேர்ந்த யூசுப் என்பவர் இவ்வாறு கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முகம்மது காசிமை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினருடன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:- திருப்பாலைக்குடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி இஸ்லாமிய பெண்கள், பொதுமக்கள் திரளாக வந்து வரவேற்று பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரனுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்ததுடன் தங்களின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். திருப்பாலைக்குடி பகுதி திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் முடிந்ததும் நிச்சயம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தேன். இதனை மகிழ்ச்சியுடன் அனைவரும் ஏற்று கொண்டனர். இவ்வாறு இஸ்லாமிய பெண்களும், பெருந்திரளான பொதுமக்களும் வந்து ஆதரவளித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை முயற்சியில் இறங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் வாக்களிக்க வலியுறுத்தி வருவதை போல அதேபோல, வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் வாக்கு சேகரிப்பதும் ஜனநாயாக கடமையுடன், உரிமையாகும். அதனை தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் நயினார்நாகேந்திரன் மக்களின் ஆதரவின் காரணமாக குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் விரக்தியில் தி.மு.க.வினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க. ஒரு வன்முறை கட்சி. பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு பணம்கொடுக்காமல் இருப்பது. புரோட்டா கடையில் வன்முறை, அழகு நிலையத்தில் தாக்குதல் என வன்முறையில் ஊறிய கட்சி. வன்முறை என்பது இருபக்கமும் கூரிய ஆயுதம். அதனை யாரும் கையில் எடுக்க கூடாது. பொதுவாகவே அ.தி.மு.க வன்முறைக்கு எதிரான கட்சி. வன்முறையை ஒருபோதும் அ.தி.மு.க ஆதரிக்காது. ஆனால் தி.மு.க. வன்முறையாலேயே வளர்ந்த கட்சி. இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025