முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் சித்தர்கூடம் சார்பில் மரக்கன்றுகள் நடும் முகாம்:

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சித்தர்கூடம் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் முகாமில் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
திருமங்கலம் நகரில் செயல்பட்டு வரும் சித்தர்கூடம் களப்பணி அமைப்பின் சார்பில் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றுள்ள கோடைகால பசுமை பயிற்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ள மாணவ,மாணவிகளுக்கு திருமங்கலம் நகரினை பசுமையாக மாற்றிடும் வகையில் மரக்கன்றுகள் நடுவதற்கும் அவற்றினை பாராமரித்து பாதுகாப்பதற்கும் நிபுணர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பசுமை பயிற்சியின் ஒருபகுதியாக திருமங்கலம் நகர் தாலுகா அலுவலகம்,செய்தியாளர்கள் அறை,நகராட்சி பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்திடும் மரமில்லா பகுதிகளில் நேற்று காலை சித்தர்கூடம் அமைப்பின் சார்பில்  பயன்தந்திடும் மரக்கன்றுகள் நடும் முகாம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.சித்தர்கூட அமைப்பின் நிர்வாகி,சமூக ஆர்வலர் த.சோம்நாத் தலைமையில் திரண்ட ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மிகுந்த ஆர்வமுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டதுடன் அதனை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தனர்.கோடைகாலத்தை பயனுள்ளதாக்கிடும் வகையில் சித்தர்கூடம் அமைப்பின் சார்பில் மாணவ,மாணவிகள் இணைந்து திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மரங்களை நட்டு வரும் நிகழ்வுகள் பொதுமமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து