எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னைக்கு இன்று வருகை தந்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
மாதிரி பயிற்சி....
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாதிரி பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
45 மையங்களில்...
பாராளுமன்ற தேர்தல், 18 சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளன. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ம் தேதி எண்ணப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 45-க்கும் அதிகமான வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணும்...
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்திலும் இது போன்ற முறையில் முதன் முதலாக வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. புதிய முறையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள சூழ்நிலையில் அது குறித்த ஆலோசனைகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அளிக்கப்படவுள்ளன.
பயிற்சி வகுப்புகள்...
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனைகள் அளிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் இன்று சென்னை வரவுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் சந்தீப் சக்சேனா, துணை ஆணையர் சுதீப் ஜெயின் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழகத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசிக்கவுள்ளனர். ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் ஒருசேர எண்ணுவது தொடர்பான மாதிரி பயிற்சி வகுப்பும் சென்னையில் நடத்தப்படவுள்ளது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாதிரி பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் காலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிறகு பிற்பகலில் செய்முறை வகுப்பு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுவதால் வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்து முடிவுகளை அறிவிக்க கூடுதல் நேரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவு படுத்திவருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
ஒரு ரூபாய் நாணயத்துடன் வைரலாகும் பிரதமர் நரேந்திர மோடியின் க்கடிகாரம்
20 Nov 2025கோவை: ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரலாகிறது.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.


