முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் வெளியேறிய தவானுக்கு பதில் ரிஷாப் பந்தை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள ஐ.சி.சி. அனுமதி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது. இந்திய அணியில் அவர் இடம்பெற்றாலும் ஆடும் லெவன் அணியில் அவர் இடம் பெறுவாரா என்பது இனிதான் தெரியும்.

பெருவிரலில்...

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருக்கு இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. மூன்று வாரத்திற்குள் காயம் குணமடைந்து விடும் என ஆணி நிர்வாகம் நம்பிக்கையில் இருந்தது. ஆனால், காயம் குணமடைய அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகும் என டாக்டர்கள் கூறியதால் இந்திய அணியில் இருந்து தவான் விலகியுள்ளார்.

இந்திய அணியில்...

அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ, உலகக்கோப்பை போட்டிக்கான தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரியிருந்தது. அக்குழு தவானின் காயம் குறித்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து, மாற்று வீரராக ரிஷப் பந்தை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் ரிஷப் பந்த் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து, வீரர்கள் அறைகளில் உலாவருவார். ஆனால், ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியே?.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து