முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா கால்பந்து: சிலியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெரு அணி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ரியோடிஜெனீரோ : கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரேசிலில் நடந்து வரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை நடந்த 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் சிலி அணி, முன்னாள் சாம்பியன் பெருவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தின. 21-வது நிமிடத்தில் பெரு அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் எடிசன் புளோர்ஸ் இடது காலால் உதைத்து கோலுக்குள் திணித்தார்.

38-வது நிமிடத்தில் பெரு வீரர் ஆந்த்ரே காரில்லோ கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் யோஷிமர் யோதுன் நெஞ்சால் தடுத்து நிறுத்தியதுடன் மின்னல் வேகத்தில் இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் அனுப்பினார். சிலி வீரர்கள் பதிலடி கொடுக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. பந்தை 65 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சிலி அணி கோல் இலக்கை நோக்கி அடித்த 7 ஷாட்களையும் பெரு அணியினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே, கடைசி நிமிடத்தில் (இஞ்சுரி டைம்) பெரு அணி வீரர் பாலோ குர்ரிரோ, சிலி கோல் கீப்பர் கேப்ரியல் அரியாஸ்சை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். முடிவில் பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான பெரு அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து