எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தரமான பால் உற்பத்தி செய்ய ஏதுவாக நடைமுறையில் உள்ள பால் பரிசோதனை முறைகளில் உள்ள இடர்பாடுகளை களையும் பொருட்டும், உற்பத்தியாளர்களின் பாலுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பால் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆரம்ப நிலையில் பாலின் தரத்தினை உறுதி செய்திடவும், பால் மற்றும் பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் காஞ்சிபுரத்தில் 4 அலகுகள், தருமபுரியில் 15 அலகுகள், புதுக்கோட்டையில் 3 அலகுகள், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஒன்றியங்களில் தலா 2 அலகுகளும் மற்றும் திருச்சி ஒன்றியத்தில் ஒரு அலகும், தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்தம் 34 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
350 மொத்த பால் குளிர்விப்பு மையங்களின் பால் கொள்முதல், பால் பரிசோதனை மற்றும் பால் குளிர்விப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், கண்காணிப்பு வசதிகள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியவும், தரமான பால் உற்பத்தியை உறுதி செய்யவும், பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் பொருட்டும், அதன் மூலம் பாலின் தரத்தினை உயர்த்திடவும் ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையின் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்திட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1982-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்து வருவதை கையாளுவதற்கு ஏதுவாக மேலும் நெய், வெண்ணெய், தயிர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்புகள் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1.26 கோடி மற்றும் இயந்திர தளவாடங்கள் ரூ.5.19 கோடி உள்பட மொத்தம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்து கூடுதல் வருவாய் பெற ஏதுவாகவும் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் பன்னீர், லஸ்ஸி, தயிர் ஆகிய பால் உபபொருட்கள் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் மேம்படுத்தும் பொருட்டு ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் லிட்டராக உயர்த்திடவும், குல்பி, நறுமணப்பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் அதன் மூலம் ஒன்றியத்தின் வருவாயை பெருக்கிடவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைத்திடவும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி துவங்கும் வரை தாராபுரம், அவினாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தி்யாளர்களி டமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிர்விக்க ஏதுவாக மொத்த பால் குளிர்விப்பான்களும், பால் விற்பனை செய்ய பால் குளிர்விப்பு அறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை ஆய்வகம், தீவன கிடங்கு மற்றும் தூய முறையில் பால் கொள்முதல் மையத்துடன் கூடிய சொந்த கட்டடங்கள் அமைத்து, சங்கங்கள் திறம்பட செயல்படவும், பால் உற்பத்தியாளர்கள் தரத்துடன் பால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், கால்நடை தீவனத்தை சேமிக்க வசதி ஏற்படுத்தவும், 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அலகு ஒன்றிற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 250 அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உற்பத்தி, உள்ளீடு பிரிவு அலுவலக கட்டடங்களை ஒருங்கிணைக்கவும், செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்வாதார செலவினத்தை நிறைவு செய்வதற்காக கருணை ஓய்வூதியம் ரூ.3500-ல் இருந்து ரூ.4000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1750-ல் இருந்து ரூ.2000 ஆகவும், உயர்த்தி ரூ.2.99 கோடி செலவில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நுகர்வோர்களிடையே அதிகரித்து வரும் ஆவின் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும் விற்பனையை அதிகரித்து மாவட்ட ஒன்றிய வருவாய் உயர்த்திடவும், ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நலனுக்காகவும், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பொருட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆவின் அதிநவீன பாலகங்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரூ.50 லட்சம் செலவிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரூ.25 லட்சம் மற்றும் களக்காட்டில் ரூ.50 லட்சம் செலவிலும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.