எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தரமான பால் உற்பத்தி செய்ய ஏதுவாக நடைமுறையில் உள்ள பால் பரிசோதனை முறைகளில் உள்ள இடர்பாடுகளை களையும் பொருட்டும், உற்பத்தியாளர்களின் பாலுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பால் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆரம்ப நிலையில் பாலின் தரத்தினை உறுதி செய்திடவும், பால் மற்றும் பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் காஞ்சிபுரத்தில் 4 அலகுகள், தருமபுரியில் 15 அலகுகள், புதுக்கோட்டையில் 3 அலகுகள், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஒன்றியங்களில் தலா 2 அலகுகளும் மற்றும் திருச்சி ஒன்றியத்தில் ஒரு அலகும், தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்தம் 34 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
350 மொத்த பால் குளிர்விப்பு மையங்களின் பால் கொள்முதல், பால் பரிசோதனை மற்றும் பால் குளிர்விப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், கண்காணிப்பு வசதிகள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியவும், தரமான பால் உற்பத்தியை உறுதி செய்யவும், பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் பொருட்டும், அதன் மூலம் பாலின் தரத்தினை உயர்த்திடவும் ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையின் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்திட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1982-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்து வருவதை கையாளுவதற்கு ஏதுவாக மேலும் நெய், வெண்ணெய், தயிர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்புகள் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1.26 கோடி மற்றும் இயந்திர தளவாடங்கள் ரூ.5.19 கோடி உள்பட மொத்தம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்து கூடுதல் வருவாய் பெற ஏதுவாகவும் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் பன்னீர், லஸ்ஸி, தயிர் ஆகிய பால் உபபொருட்கள் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் மேம்படுத்தும் பொருட்டு ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் லிட்டராக உயர்த்திடவும், குல்பி, நறுமணப்பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் அதன் மூலம் ஒன்றியத்தின் வருவாயை பெருக்கிடவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைத்திடவும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி துவங்கும் வரை தாராபுரம், அவினாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தி்யாளர்களி டமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிர்விக்க ஏதுவாக மொத்த பால் குளிர்விப்பான்களும், பால் விற்பனை செய்ய பால் குளிர்விப்பு அறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை ஆய்வகம், தீவன கிடங்கு மற்றும் தூய முறையில் பால் கொள்முதல் மையத்துடன் கூடிய சொந்த கட்டடங்கள் அமைத்து, சங்கங்கள் திறம்பட செயல்படவும், பால் உற்பத்தியாளர்கள் தரத்துடன் பால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், கால்நடை தீவனத்தை சேமிக்க வசதி ஏற்படுத்தவும், 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அலகு ஒன்றிற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 250 அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உற்பத்தி, உள்ளீடு பிரிவு அலுவலக கட்டடங்களை ஒருங்கிணைக்கவும், செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்வாதார செலவினத்தை நிறைவு செய்வதற்காக கருணை ஓய்வூதியம் ரூ.3500-ல் இருந்து ரூ.4000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1750-ல் இருந்து ரூ.2000 ஆகவும், உயர்த்தி ரூ.2.99 கோடி செலவில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நுகர்வோர்களிடையே அதிகரித்து வரும் ஆவின் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும் விற்பனையை அதிகரித்து மாவட்ட ஒன்றிய வருவாய் உயர்த்திடவும், ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நலனுக்காகவும், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பொருட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆவின் அதிநவீன பாலகங்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரூ.50 லட்சம் செலவிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரூ.25 லட்சம் மற்றும் களக்காட்டில் ரூ.50 லட்சம் செலவிலும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.