எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும் என்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தரமான பால் உற்பத்தி செய்ய ஏதுவாக நடைமுறையில் உள்ள பால் பரிசோதனை முறைகளில் உள்ள இடர்பாடுகளை களையும் பொருட்டும், உற்பத்தியாளர்களின் பாலுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் 701 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.76 கோடி மதிப்பீட்டில் தானியங்கி பால் பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆரம்ப நிலையில் பாலின் தரத்தினை உறுதி செய்திடவும், பால் மற்றும் பால் உப பொருட்களை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் காஞ்சிபுரத்தில் 4 அலகுகள், தருமபுரியில் 15 அலகுகள், புதுக்கோட்டையில் 3 அலகுகள், விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி ஒன்றியங்களில் தலா 2 அலகுகளும் மற்றும் திருச்சி ஒன்றியத்தில் ஒரு அலகும், தலா 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்தம் 34 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
350 மொத்த பால் குளிர்விப்பு மையங்களின் பால் கொள்முதல், பால் பரிசோதனை மற்றும் பால் குளிர்விப்பு செயல்பாடுகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், கண்காணிப்பு வசதிகள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். எளிய முறையில் பால் கலப்படத்தை கண்டறியவும், தரமான பால் உற்பத்தியை உறுதி செய்யவும், பாலில் கேடு விளைவிக்கும் கலப்பட பொருள் சேர்ப்பதை கண்டறியவும் 103 பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு ரூ. 2.06 கோடி மதிப்பீட்டில் பால் கலப்படம் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் பொருட்டும், அதன் மூலம் பாலின் தரத்தினை உயர்த்திடவும் ஈரோடு கால்நடை தீவன தொழிற்சாலையின் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன் ஆக உயர்த்திட ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 1982-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாக நிறுவப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் லிட்டராக பால் உற்பத்தி உயர்ந்து வருவதை கையாளுவதற்கு ஏதுவாக மேலும் நெய், வெண்ணெய், தயிர் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்புகள் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ.1.26 கோடி மற்றும் இயந்திர தளவாடங்கள் ரூ.5.19 கோடி உள்பட மொத்தம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரித்து கூடுதல் வருவாய் பெற ஏதுவாகவும் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் பன்னீர், லஸ்ஸி, தயிர் ஆகிய பால் உபபொருட்கள் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் மேம்படுத்தும் பொருட்டு ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் லிட்டராக உயர்த்திடவும், குல்பி, நறுமணப்பால் ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி பிரிவில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் அதன் மூலம் ஒன்றியத்தின் வருவாயை பெருக்கிடவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நலன்கள் கிடைத்திடவும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் புதிய பால் பண்ணை தொழிற்சாலை மற்றும் பால் உபபொருட்கள் உற்பத்தி துவங்கும் வரை தாராபுரம், அவினாசி மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தி்யாளர்களி டமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிர்விக்க ஏதுவாக மொத்த பால் குளிர்விப்பான்களும், பால் விற்பனை செய்ய பால் குளிர்விப்பு அறைகளும் மற்றும் சேமிப்பு கிடங்குகளும் ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனை ஆய்வகம், தீவன கிடங்கு மற்றும் தூய முறையில் பால் கொள்முதல் மையத்துடன் கூடிய சொந்த கட்டடங்கள் அமைத்து, சங்கங்கள் திறம்பட செயல்படவும், பால் உற்பத்தியாளர்கள் தரத்துடன் பால் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும், கால்நடை தீவனத்தை சேமிக்க வசதி ஏற்படுத்தவும், 250 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் அலகு ஒன்றிற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 250 அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் உற்பத்தி, உள்ளீடு பிரிவு அலுவலக கட்டடங்களை ஒருங்கிணைக்கவும், செயல்திறன் மேம்பாட்டுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் ஒருங்கிணைந்த அலுவலக கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்வாதார செலவினத்தை நிறைவு செய்வதற்காக கருணை ஓய்வூதியம் ரூ.3500-ல் இருந்து ரூ.4000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ரூ.1750-ல் இருந்து ரூ.2000 ஆகவும், உயர்த்தி ரூ.2.99 கோடி செலவில் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் நுகர்வோர்களிடையே அதிகரித்து வரும் ஆவின் பால், பால் பொருட்கள் மற்றும் உப பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டும் விற்பனையை அதிகரித்து மாவட்ட ஒன்றிய வருவாய் உயர்த்திடவும், ஒன்றியம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நலனுக்காகவும், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பொருட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆவின் அதிநவீன பாலகங்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரூ.50 லட்சம் செலவிலும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ரூ.25 லட்சம் மற்றும் களக்காட்டில் ரூ.50 லட்சம் செலவிலும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.