முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டேன் - ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மதிப்பு நண்பரை இழந்து விட்டேன் என வேதனைத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தன் பின்னர் கடந்த 9-ம் தேதி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலமானார். ஜெட்லி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், அருண் ஜேட்லி அரசியல் சாதனையாளர். மிகச் சிறந்த அறிவாளி. சட்ட நிபுணர். இவை அனைத்தையம் விடவும் நகைச்சுவை உணர்வும், ஈர்ப்பும் கொண்ட தலைவர். அவரது மறைவு என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. மதிப்பு மிக்க ஒரு நண்பரை இழந்து விட்டேன். நுண்ணிய அறிவும், பிரச்சினைகளை புரிந்து கொள்ளுதலும் வெகு சிலருக்கே வாய்க்கப் பெறும். அத்தகைய தன்மை கொண்டவர் அருண் ஜெட்லி. இவ்வாறு அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து