எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இன்று காலை 10.00 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராசன்- பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார். வளர்ப்புத்தாய் இராஜாமணி அம்மையாரால் வளர்க்கப்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார் ஆவார். பேரறிஞர் அண்ணா, ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அரசியல் தத்துவார்த்த மந்திராமான வார்த்தையை நாட்டு மக்களுக்கு நல்கியவர். அரசியலில் குடும்ப பாச உணர்வை ஊட்டியவர். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான். மாபெரும் ஜனநாயகத் தலைவர்.
பேரறிஞர் அண்ணா 06.03.1967 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். சென்னையில் 1968 ஜனவரித் திங்களில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தினார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தார். சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள் நடத்தினார். சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரறிஞர் அண்ணா, தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு, சென்னை, கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார். உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ. 9 லட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் சப்-பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரை சந்தித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
தமிழ்நாடு அரசு, பேரறிஞர் அண்ணாவுக்கு , சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் எழுப்பி அணையா விளக்கை ஏற்றி வைத்து அண்ணா சதுக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அங்கு அண்ணாவின் அழகு தமிழைக் கேட்க ஒலிச்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகமும், அண்ணா நூல்கள் விற்பனைக் கூடமும் அண்ணா சதுக்கத்தை அணி செய்கின்றன. 1969-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி இந்திய அரசு அண்ணாவின் நினைவாக 20 காசு அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. 1971-ம் ஆண்டு சென்னை மாநகரில் மவுன்ட் ரோடுக்கு அண்ணா சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழக அரசு வாங்கிய இரண்டு கப்பல்களுக்கு எம்.வி.தமிழ் அண்ணா என்ற பெயரும், தமிழ் அண்ணா என்ற பெயரும் சூட்டப்பட்டன.
1978-ம் ஆண்டு சென்னை, கிண்டியில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு எம்.ஜி.ஆரால் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், 1980-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த இல்லத்தை எம்.ஜி.ஆர். தலைமையில் அமைத்த தமிழக அரசு செப்டம்பர் 16 அன்று அண்ணா நினைவு இல்லமாக மாற்றியது. 1990-ம் ஆண்டு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, சொர்கவாசல் போன்ற நாடகங்கள், ஆரியமாயை, கம்பரசம் மற்றும் ரோமாபுரி ராணிகள் போன்ற பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் 1994-ம் ஆண்டு முதல் அம்மாவால் அரசுடைமையாக்கப்பட்டது. ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தினை அம்மா 09.12.2012 அன்று திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு (இன்று) 15.9.2019 காலை 10.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
13 Oct 2025சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.