எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக நாடு முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் கிஷன்ரெட்டி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு அமைப்பின் ஒய்.சி.மோடி, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் பேசினர். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கூறியதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிராக பண பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தானை பல்வேறு தடவை எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்குமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது. தற்போது அந்த சர்வதேச அமைப்பு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கூடி பயங்கரவாதிகளுக்கு பண பரிமாற்றம் செய்யும் நாடுகள் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.
பாகிஸ்தான் அரசு எப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் இந்த செயல் நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதை சர்வதேச நாடுகளிடம் நிரூபிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு வங்கிகள் மூலம் உதவி செய்வதை தேசிய புலனாய்வு அமைப்பு மிக திறமையாக கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தேவையான அளவுக்கு நிதி கொடுக்கிறது. இதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதிகள் பற்றி தகவல் தரும் உளவுத்துறையால் மட்டுமே பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியாது. அவர்களுக்கு உதவும் பண பரிமாற்றம் உள்பட அனைத்தையும் வேரறுக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியும். போர் வந்தால் அனைவருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பயங்கரவாதத்திற்கு நாம் அனைத்து வகையிலும் முடிவு கட்ட வேண்டும். இத்தகைய வழிகாட்டுதல்களின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு அஜித்தோவல் கூறினார்.
அவரை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக்மிட்டல் பேசினார். அவர் கூறியதாவது:-
தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு சதி திட்டங்கள் முன்னதாக முறியடிக்கப்பட்டன. காலிஸ்தான் சதி முழுமையாக தகர்க்கப்பட்டது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட 127 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் அவர்கள் 22 இடங்களில் முகாம்கள் அமைத்து இருந்தனர். அவர்கள் பதுங்கி இருந்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து கண்ணிவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செயல்பாடுகள் மூலம் தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளும், வங்கதேச பயங்கரவாதிகளும் காலூன்ற முயற்சி செய்தது தெரிய வந்தது.
இந்த பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமிய மதகுரு ஜாகீர்நாயக் பேச்சால் கவரப்பட்டு பயங்கரவாத இயக்கத்துக்கு வந்தது தெரிய வந்தது. நாடு முழுவதும் இவர்கள் மிகப்பெரிய நெட் வொர்க்கை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தனர். அந்த நெட்வொர்க்கை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இதையடுத்து நாடு முழுவதும் அதிரடி வேட்டைகள் நடத்தப்பட்டன. கைதான 127 பேரில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 33 பேர் பிடிபட்டனர். உத்தரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கைதான பயங்கரவாத ஆதரவாளர்கள் தாங்கள் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஜக்ரன் ஹசீம் பேச்சால் கவரப்பட்டோம் என்று வாக்குமூலம் அளித்தனர். அவர்களுக்கும், சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பாக இந்த பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் உல் முஜாகிதீன் (ஜெஎம்பி) என்ற அமைப்புடனும் தொடர்பில் இருந்தனர்.
வங்கதேசத்தில் ஷரியத் சட்டப்படி ஆட்சியை உருவாக்க ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நடமாட்டம் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார் ஆகிய 4 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள புத்த மத வழிபாட்டு தலங்களை குண்டு வைத்து தகர்க்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தனர். இதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். பர்மாவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் நினைத்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்தது. இதன் காரணமாக பல பயங்கரவாத செயல்கள் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்பட்டன.
பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் மூலம் பயங்கரவாத செயல்களை உருவாக்க பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியது. அந்த சதியும் முறியடிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் 8 இடங்களில் காலிஸ்தான் குழுக்கள் படுகொலைகளை செய்தது. இதன் மூலம் கலவரங்களை உருவாக்க நினைத்தனர். இதற்காக பாகிஸ்தான் பெரிய அளவில் பண உதவியை செய்தது. பாகிஸ்தானில் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை போல கள்ள நோட்டுகளை அச்சடித்து பல கோடிக்கு விநியோகித்தனர். இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் கூட காலிஸ்தான் விடுதலை அமைப்புக்கு பண உதவிகள் வந்தன. இது தொடர்பாக 16 பேரை கைது செய்து காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை முடக்கி உள்ளோம்.
அமெரிக்காவில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் இந்தியாவில் சீக்கிய இளைஞர்களின் செயல்பாடுகளை மாற்ற முயற்சி செய்தனர். அதையும் தடுத்து நிறுத்தி உள்ளோம். இது தொடர்பாக உத்தரபிரதேசத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2020-ம் ஆண்டுக்குள் தங்களது இலக்கை அடைய பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. அதுபோன்று காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஏராளமாக பணம் கொடுத்து உதவுகிறது. இந்தியாவுக்கான தூதர் மூலம் இந்த பணம் வினியோகிக்கப்படுகிறது. காஷ்மீரில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூத்த பிரிவினைவாதிகள் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் இதுவரை ஜாமீனில் விடுபடவில்லை. அவர்கள் அனைவரும் ஹவாலா அடிப்படையில் பாகிஸ்தான் தூதரிடம் இருந்து பணம் பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாகிஸ்தான் அச்சடித்து இந்தியாவுக்குள் பரவ விடுவதையும் இவர்கள் மூலம் கண்டு அறிந்துள்ளோம். இவ்வாறு தேசிய புலனாய்வு அமைப்பின் ஐ.ஜி. அலோக் மிட்டல் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Jan 2026மதுரை, காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சி.பி.ஐ. டி.எஸ்.பி. விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க.வுக்கு விசில் சின்னம்
22 Jan 2026டெல்லி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
-
இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: சட்டசபையில் அமைச்சர் தகவல்
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
22 Jan 2026சென்னை, பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே த.வெ.க.வுக்கு விசில் சின்னம்: த.வெ.க.வக்கு தேர்தல் ஆணையம் 'செக்'
22 Jan 2026சென்னை, விசில் சின்னம் த.வெ.க.வுக்கு மட்டும் இல்லையா? த.வெ.க.
-
மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதி தமிழக கவர்னருக்கு இல்லை: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு
22 Jan 2026சென்னை, கவர்னர் ஆர்.என். ரவிக்கு, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் கோவி.
-
விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Jan 2026சென்னை, விபி ஜி ராம் ஜி திட்டம் தொடர்பாக இன்று (ஜன. 23) தமிழக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஆந்திரத்தில் தனியார் பேருந்து லாரி மீது மோதி தீ: 3 பேர் பலி
22 Jan 2026அமராவதி, ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்
-
இ.பி.எஸ். வீட்டில் பியூஷ் கோயலுக்கு விருந்து: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
22 Jan 2026சென்னை, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
-
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
22 Jan 2026சென்னை, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
கடலோர தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
22 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று (ஜன. 23) முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
22 Jan 2026சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வருகிற ஜன. 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க.
-
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்
22 Jan 2026சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சு
22 Jan 2026நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போர்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்தது த.மாகா மற்றும் புதிய நீதிக் கட்சி
22 Jan 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வரும் சட்டபேரவையில் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Jan 2026சென்னை, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி, தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டுமென துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு
22 Jan 2026ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான்: ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
22 Jan 2026அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழ
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கடும் அமளியால் கேரளா சட்டமன்றம் ஒத்திவைப்பு
22 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரளா சட்டமன்றத்தில் நேர்று கடும் அமளி ஏற்பட்டத்தை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்; துரதிர்ஷ்டவசமான சோகம்: தலைமை நீதிபதி கருத்து
22 Jan 2026டெல்லி, கரூர் கூட்ட நெரிசல் துரதிர்ஷ்டவசமான சோகம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா சட்டப்பேரவையில் கவர்னர் கெலாட் வெளிநடப்பு: காங். எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையால் பரபரப்பு
22 Jan 2026கர்நாடக, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் கெலாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சத்தீஸ்கரில் பயங்கரம்: இரும்பு ஆலையில் வெடி விபத்தில் 6 பேர் பலி
22 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கர் உள்ள இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அகமதாபாத் விபத்திற்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 15,000 கோடி ரூபாய் நஷ்டம்
22 Jan 2026டெல்லி, அகமதாபாத் விபத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்
22 Jan 2026டெல்லி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
-
இன்றைய ராசிபலன்
22 Jan 2026


