முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும் - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : வருகிற 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா பிரெக்சிட்டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர் 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து