முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: கருத்துக் கணிப்புக்குத் தடை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முந்தைய – பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 21-ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும்.

1951–ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஏ–ம் பிரிவின் (1)–ம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2பி) உட்பிரிவின் விதித்துறைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 21-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலான கால அளவை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் தொடர்பாக, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1951–ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126 (1) (பி)-ம் பிரிவின் கீழ், மேற்காணும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது’.
இத்தகவலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து