எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : கமலுக்கு அரசியலில் என்ன தெரியும்? மக்களின் பிரச்சினை பற்றி தெரியுமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி என்ன அரசியல் தலைவரா என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த முதல்வர் எடப்பாடி தற்போது கமலஹாசனுக்கும் கேள்விக்கணை தொடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
கேள்வி: சென்னையில் காற்றில் மாசு அதிகமாக இருப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
பதில்: ஏற்கனவே, வருவாய்த் துறை அமைச்சர் ஊடகத்தின் வாயிலாக இதுகுறித்து தகுந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். எந்தெந்த வகையில் மாசு ஏற்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளார். புல்புல் புயலினால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த இடத்தில் மாசு ஏதும் தென்படவில்லையே!
கேள்வி: பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது போல், காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா?
பதில்: தற்போதுவரை அப்படிப்பட்ட திட்டம் ஏதும் அரசிடமில்லை. நிதிநிலை திருப்தியடைந்தவுடன் இது குறித்து அரசு பரிசீலிக்கும்.
கேள்வி: கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வருகின்றாரா?
பதில்: கால்நடைப் பூங்கா அமைப்பது மிகப்பெரிய திட்டம். அது தொடர்பாக பல்வேறு பணிகள் இருக்கிறது. இதற்கு முதற்கட்டமாக ரூபாய் 396 கோடி ஒதுக்குகின்றோம். பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். ஏறக்குறைய ரூபாய் 1,000 கோடி அளவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருக்கின்றது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவாக அமையவிருப்பதால், அதில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மேலும், இதில் பல்வேறு வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்பொழுது முதற்கட்டப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் விரைவாக முடிந்து, கால்நடைப் பூங்கா ஏற்படுத்தப்படும்பொழுது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
கேள்வி: நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கிய ரூ.5,000 கோடியை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறதே?
பதில்: நீங்கள் தான் எல்லா ஊடகத்திலும் மாற்றி மாற்றி காட்டினீர்களே? சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்கு நிலம் எடுத்தோம், நிலம் கொடுக்கக்கூடாது என்று சொன்னீர்கள். இது எல்லா இடங்களிலும் தொற்றுநோய் போலப் பரவி தமிழகத்தில் எங்கேயும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்கோபுரம் கொண்டு போவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், சாலை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களும் தயவு செய்து அரசுக்குத் துணை நிற்கவேண்டும். விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத் தான் நாங்கள் சாலைகளை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், நிலத்தை கையகப்படுத்தும்பொழுது பலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகிறார்கள், சிலர் போராட்டங்கள் நடத்துகிறார்கள், சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன. ஏன் ஊடகமே துணை நிற்கிறது, பல்வேறு விமர்சனங்களை வைக்கிறீர்கள், எப்படி நாங்கள் விரிவாக்கம் செய்ய முடியும்? பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசுக்கு பக்கபலமாக இருந்தால்தான் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். பொதுமக்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறும், அதேபோல, மின்கோபுரமும் கொண்டுவர முடியும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்கிறோம், நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதினால், அதற்கேற்றவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், மின்பாதை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க இயலும். இதையெல்லாம் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.
கேள்வி: மக்கள் வீதிக்கு வருவதால்தான் போராட வேண்டியிருக்கிறது?பதில்: மறுபடியும் நீங்கள் திருப்பிக் கேட்கிறீர்கள். அரசாங்கம் எல்லா முயற்சியும் எடுக்கிறது. இன்னும் 10 வருடம் கழித்து என்ன நடக்குமென்று திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு சுமார் ஐந்தாண்டு காலம் ஆகும். இப்படி எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், அரசாங்கத்தால் எப்படி திட்டங்களைச் செயல்படுத்த முடியும்? 2001-2002ல் தோராயமாக 100 லட்சம் வாகனங்கள் என்று இருந்தது, இப்பொழுது 300 லட்சமாக உயர்ந்திருக்கிறது, இதனால், விபத்துகள் அதிகரிக்கிறது. இவையெல்லாம் குறைக்க வேண்டுமென்ற காரணத்தினால் தான் நவீன முறையில் உலகத் தரத்திற்கு ஏற்ற சாலை அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில காலகட்டத்தில், இதற்குத் தடை வருகிறது. தடை வருவதனால், நாம் கொண்டு வருகின்ற திட்டங்களெல்லாம் பாழாகிறது, வீணாகிறது. இன்றைக்கு தமிழகத்தில் 14 சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று நாம் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால், முதற்கட்டமாக 4 சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து, அதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். ஒரு சில இடங்களில் நிலம் எடுத்தோம், பெரும்பாலான இடங்களில் எடுக்க முடியவில்லை. நான் டெல்லிக்கு செல்கின்றபொழுது நேரடியாக பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அவர்களையும் சந்தித்து, கோரிக்கை வைத்து, துரிதமாக நிலம் எடுக்கின்ற பணிகளில் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஆதரவோடும், பொதுமக்கள் ஆதரவோடும், நிலங்களை கையகப்படுத்தி, மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைத்து, அவர்கள் அங்கே பணி செய்வதற்கு அரசு துணை நிற்கும்.
கேள்வி: ரஜினியைப் போன்றே கமலும் அ.தி.மு.க, தி.மு.க-வைப் பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?
பதில்: வெற்றிடம் என்று சொன்னார். ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. கமல் மிகப்பெரிய தலைவர் தானே? நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களைப் பெற்றார்? இவையெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு, 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தினால், திரைப்படத் துறையில் தகுந்த வாய்ப்பில்லாத காரணத்தினால் கட்சி ஆரம்பிக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லிப் பேசுவது தவறாக உள்ளது. இத்தனை காலமாக அவர் எங்கிருந்தார். நான் 1974-லிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தில் சேர்ந்து, பாடுபட்டு உழைத்து இந்நிலைக்கு வந்திருக்கின்றோம். எடுத்தவுடன் நாங்கள் இந்த நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டு காலம் கட்சியில் பணியாற்றி இருக்கின்றோம். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கின்றோம். பல்வேறு பணிகளை மக்களுக்குச் செய்து இப்பொழுது ஆதரவைப் பெற்று இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். அவர்கள் மக்களுக்கு என்ன பணி செய்தார்கள்? திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள். இன்று வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று வரை வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களைவிட, மிகப்பெரிய நடிகர், மரியாதைக்குரிய சிவாஜி கணேசன் அவர்களே தேர்தலை சந்தித்து எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரைவிடவும் மிகச்சிறந்த நடிகர் இல்லை. பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரெல்லாம் கட்சி தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும். வயது முதிர்ந்த காரணத்தினாலே, கமலஹாசன் அவராகவே இப்படி ஒரு முன்னேற்பாட்டை செய்து கொண்டார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் திரைப்படத்தைப் பார்த்தால்கூட போதுமென்ற நிலைக்கு வந்துவிட்டார் என்று கருதுகின்றேன். அந்த நிலைக்குச் சென்று விட்டார், அதனால் தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா? அந்தப் பகுதி மக்களின் பிரச்சினை தெரியுமா? என்ன அடிப்படை தெரியும்? அடிப்படை தெரியாமலே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள். திரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக் கொண்டார்கள், அந்தப் பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கின்றார்கள்.
கேள்வி: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதுபோல் தான் வருவாரா?
பதில்: யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும், பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.