Idhayam Matrimony

பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வரும்போது நிர்மலாதேவி சரிவர ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து