முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயினில் கொரோனா பரவலை தடுக்க இறுதி சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மட்ரிட் : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஸ்பெயினில் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஸ்பெயினில் பிரார்த்தனை கூட்டங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் மூன்று பேருக்குமேல் கலந்து கொள்ள கூடாது. மேலும் 2 மீட்டர் இடைவெளியில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஸ்பெயினில் வரும் 12-ம் தேதி வரை அவசர நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 87,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ்,190-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து