முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் தகவல்

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலாராஜேஷ் தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுபற்றி தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது.,

57 வயது பெண் பலி

கொரோனா பாதிப்புக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 57 வயது பெண் ஒருவர் பலியாகி உள்ளார். மூச்சு திணறலால் உயிரிழந்த அவர் திருச்சி சென்று வந்தவர் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 19,060 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.

தமிழகத்தில் 50 பேருக்கு இன்று (நேற்று)கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த 50 பேரில் 48 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். தொற்று வந்தவர்கள் சிகிச்சைக்கு முன்வந்தால்தான் நோயை குணப்படுத்த முடியும் என்று கூறினார். சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து