முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம்: டுவிட்டரில் பிரதமர் மோடி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு அளிக்க முடிவு செய்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை முழுவதுமாக வரவேற்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு முன்பை விடவும் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. கொரோனாவை வெல்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா மனித நேயத்துடன் செயல்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து