முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ம் தேதி தொடங்க வேண்டாம்! தமிழகத்தில் விமான சேவையை ஜூன் மாதத்திற்கு பின் தொடங்கலாம் : பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 25-ம் தேதி முதல் விமான  சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். 

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன்படி, வரும் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25-ம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து