முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோரும் பிரக்யான் ஓஜா

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா வெளிநாட்டு லீக்குகளில் விளையாட பி.சி.சி.ஐ.-யிடம் அனுமதி கோர உள்ளார்.

வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. அனுமதி வழங்குவதில்லை. உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பின் சில வீரர்கள் பி.சி.சி.ஐ.-யின் அனுமதியோடு விளையாடி வருகின்றனர். வீரேந்திர சேவாக், ஜாகீர் கான் ஆகியோர் டி10 லீக்கில் விளையாடியுள்ளனர். யுவராஜ் சிங் குளோபல் டி20 தொடரில் விளையாடிள்ளனர். 

இந்நிலையில் பிரக்யான் ஓஜா டி20 மற்றும் தி ஹண்ட்ரெட் தொடர்களில் விளையாட அனுமதி கேட்க இருக்கிறார். இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் சில லீக்குகளில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். சரியாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.ஆனால் பி.சி.சி.ஐ.-யின் அனுதியை பொருத்துதான் எல்லாம் உள்ளது.

அதற்கான நேரம் வரும் போது பி.சி.சி.ஐ.-யிடம் பேசுவேன். என்ன நடக்கும் என்பது தற்போது யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் வைப்பேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து