முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா- சீனா எல்லை பிரச்சினை: மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப்

புதன்கிழமை, 27 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையில் இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே 3 ஆயிரத்து 488 கி.மீ. தூரத்துக்கு எல்லை கோடு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகத்தான் எல்லை பகுதிகளில் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இதற்கிடையே லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக  உள்ளதாக  டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி இருநாடுகளிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்து வந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து