முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகப் போரின் போது கூட இப்படி ஊரடங்கு இல்லை: ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் பேசுகையில்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்து விட்டது. உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில்லை. இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டு விடப்போகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

ராஜிவ் பஜாஜ் கூறியது, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடுமையானது. கொரோனா பரவல் அச்சத்தை மக்களின் மனதில் இருந்து போக்க ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிக்க பிரதமர் முயற்சிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து