முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
Poleis 2023-09-29

Source: provided

சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திர காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்தை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டி.எஸ்.பி.யாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். வழக்கில் நேற்று சி.பி.ஐ. விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து