எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை. இன்று முதல் எவையெல்லாம் இயங்கலாம். எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், ரெஸ்டாராடெண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களும், ரிக்சாக்களும் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 188-க்கும் மேலான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 9 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார்.
அதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்தடுத்து பலமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரையில் இந்த முழு ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலில் இருந்து வந்தது. மதுரையில் முதலில் 12-ம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு பிறகு மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மதுரை மக்கள் ஆவலோடு அந்த கேள்விக்கு விடையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை.
இன்று 15-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மதுரை கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தளர்வுகள் என்னென்ன?
இன்று 15-ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
1. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கருதி சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சிகள், நகரசபைகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
2. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
5. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை மற்றும் ஜவுளி கடைகள்) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குளிர்சாதனை வசதிக்கு அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களுக்கும் அனுமதி இல்லை.
டீக்கடைகளுக்கு அனுமதி
டீக்கடைகள், ரெஸ்டாரெண்டுகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் எனப்படும் மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது. டீக்கடைகளிலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிடலாம். சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் பயணிக்கலாம்.
ஆட்டோக்களுக்கு அனுமதி
அதே போல் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் டிரைவரை தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதியில்லா விஷயங்கள்
மத வழிபாட்டு தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை. மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், ஜிம்முகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூக அரசியல் ரீதியிலான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
வரும் 31-ம் தேதி வரை பொதுவான ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மதுரை கலெக்டருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.