எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை. இன்று முதல் எவையெல்லாம் இயங்கலாம். எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், ரெஸ்டாராடெண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களும், ரிக்சாக்களும் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 188-க்கும் மேலான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 9 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார்.
அதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்தடுத்து பலமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரையில் இந்த முழு ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலில் இருந்து வந்தது. மதுரையில் முதலில் 12-ம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு பிறகு மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மதுரை மக்கள் ஆவலோடு அந்த கேள்விக்கு விடையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை.
இன்று 15-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மதுரை கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தளர்வுகள் என்னென்ன?
இன்று 15-ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
1. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கருதி சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சிகள், நகரசபைகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
2. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
5. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை மற்றும் ஜவுளி கடைகள்) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குளிர்சாதனை வசதிக்கு அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களுக்கும் அனுமதி இல்லை.
டீக்கடைகளுக்கு அனுமதி
டீக்கடைகள், ரெஸ்டாரெண்டுகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் எனப்படும் மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது. டீக்கடைகளிலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிடலாம். சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் பயணிக்கலாம்.
ஆட்டோக்களுக்கு அனுமதி
அதே போல் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் டிரைவரை தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதியில்லா விஷயங்கள்
மத வழிபாட்டு தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை. மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், ஜிம்முகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூக அரசியல் ரீதியிலான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
வரும் 31-ம் தேதி வரை பொதுவான ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மதுரை கலெக்டருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம்
03 Nov 2025கோவை, திருமணம் ஆன 4-வது நாளில் கணவரை உதறிவிட்டு புதுப்பெண் அக்கா கணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2025.
03 Nov 2025 -
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
03 Nov 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல்
03 Nov 2025புதுடெல்லி, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.-க்கு தடை கோரி தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்: மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ. 6ல் அனைத்துக்கட்சி கூட்டம்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்க மூத்த அமைச்சர்கள் தலைமையில்
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
03 Nov 2025புது டெல்லி, நாட்டில் உள்ள 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்க மறுத்து
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
03 Nov 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து அச்சப்பட தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
03 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
-
தகுதியான வாக்காளர்களை கண்டறிய தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று தொடக்கம்
03 Nov 2025சென்னை, தகுதியான வாக்காளர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய தமிழகம் முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கண
-
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத அரசு வெட்கப்பட வேண்டும்: த.வெ.க.
03 Nov 2025சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேரை விடுவிக்க த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
03 Nov 2025சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.வெ.க.
-
தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
03 Nov 2025டெல்லி, தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் வரும் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தப்பியோடிய கும்பலுக்கு போலீஸ் வலை
03 Nov 2025கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
-
மகளிர் உலகக்கோப்பை: அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள்
03 Nov 2025மும்பை: நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த, விக்கெட் எடுத்த டாப்-5 வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
தெலுங்கானா விபத்தில் 24 பேர் பலி: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
03 Nov 2025டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இந்தியாவின் சிறந்த முதல்வர் யார்? மு.க.ஸ்டாலின் பெயரை கூறிய தேஜஸ்வி யாதவ்
03 Nov 2025பாட்னா: இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
-
பவதாரிணி நினைவாக இசைக்குழு: இளையராஜா
03 Nov 2025சென்னை: பவதாரிணி நினைவாக இசைக்குழுவை இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகம் செய்தார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வின் எந்த சதித்திட்டங்களும் எடுபடாது: தருமபுரி திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
03 Nov 2025தருமபுரி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் சதிச்செயலில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பா.ஜ
-
தமிழகத்தில் வெப்பநிலை உயரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Nov 2025சென்னை, தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிராந்தி கௌட்டுக்கு ரூ.1 கோடி
03 Nov 2025மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ள
-
ஐ.சி.சி. உலகக்கோப்பையை வென்று தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்..!
03 Nov 2025மும்பை: 13-வது ஐ.சி.சி.
-
அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு
03 Nov 2025சென்னை: அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் உள்ளதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்., இடம் பெற கார்த்தி சிதம்பரம் எம்.பி. விருப்பம்
03 Nov 2025மதுரை: அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் மானியம் நிறுத்தம்: உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதி
03 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் மானியம் நிறுத்தப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஏழைகள் அவதியடைந்து வருகின்றனர்.
-
விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை எப்போது..? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
03 Nov 2025சென்னை: விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


