எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை. இன்று முதல் எவையெல்லாம் இயங்கலாம். எவற்றுக்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற விபரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், ரெஸ்டாராடெண்டுகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களும், ரிக்சாக்களும் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 188-க்கும் மேலான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் இதுவரை 9 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய்த் தொற்று மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் 22-ம் தேதி ஒரு நாள் ஊரடங்கை அறிவித்தார்.
அதன் பிறகு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்தடுத்து பலமுறை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் வரும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, மதுரையில் இந்த முழு ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலில் இருந்து வந்தது. மதுரையில் முதலில் 12-ம் தேதி வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு பிறகு மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நேற்று வரை அமலில் இருந்தது.
இந்நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று மதுரை மக்கள் ஆவலோடு அந்த கேள்விக்கு விடையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படவில்லை.
இன்று 15-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை என்ற விபரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மதுரை கலெக்டர் டி.ஜி.வினய்க்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தளர்வுகள் என்னென்ன?
இன்று 15-ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
1. ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், சிறிய மசூதிகள், தர்ஹாக்கள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றை கருதி சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சிகள், நகரசபைகள், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
2. அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதியுடன் தொடர்புடைய ஆலைகளுக்கு 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
4. அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
5. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள்(நகை மற்றும் ஜவுளி கடைகள்) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குளிர்சாதனை வசதிக்கு அனுமதியில்லை. ஷாப்பிங் மால்களுக்கும் அனுமதி இல்லை.
டீக்கடைகளுக்கு அனுமதி
டீக்கடைகள், ரெஸ்டாரெண்டுகள், காய்கறி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் எனப்படும் மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்களில் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது. டீக்கடைகளிலும் 50 சதவீத மக்கள் அமர்ந்து சாப்பிடலாம். சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் டிரைவரை தவிர்த்து 3 பயணிகள் பயணிக்கலாம்.
ஆட்டோக்களுக்கு அனுமதி
அதே போல் ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் டிரைவரை தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதியில்லா விஷயங்கள்
மத வழிபாட்டு தலங்களில் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை. மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணத்துக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். சர்வதேச விமான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
மெட்ரோ ரயில் சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், ஜிம்முகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.
சமூக அரசியல் ரீதியிலான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கும் அனுமதி இல்லை.
வரும் 31-ம் தேதி வரை பொதுவான ஊரடங்கு அமலில் இருக்கும். அதே நேரம் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மதுரை கலெக்டருக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 82 பேர் பலி
03 Jul 2025ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம