முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 15 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் மேலான டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து