முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் ஆன்லைன் கற்பித்தல் விதிமுறைகளைப் பற்றியும் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மார்ச் 16-ம் தேதி முதல் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், துறை ஆணையர் சிஜு தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இதில், 10-ம் வகுப்புத் தேர்ச்சி அறிவித்து நீண்ட நாட்களாகி விட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதா, கிரேடு வழங்குவதா என்பது பற்றியும், அதே போல பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆன்லைன் கல்வி முறைகள் குறித்து மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது. அதை அப்படியே ஏற்பதா, மாற்றங்கள் செய்வதா என்பது குறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து