எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகை தருகிறார்.
இங்கு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். இன்று இரவு மதுரையில் தங்கும் அவர், நாளை 7-ம் தேதி நெல்லை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்துகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1.84 கோடி பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் ஆரம்பத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், தற்போது கணிசமாக குறைந்து விட்டது.
இதே போல் மதுரையிலும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே. ராஜூ ஆகியோரின் அதிரடி நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த தொற்றின் பாதிப்பு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்லில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகிறார். முதலில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பிறகு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக முதல்வரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்கிறார்கள். திண்டுக்கல்லில் தனது பணிகளை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பகல் 12.30 மணிக்கு மதுரை புறப்படுகிறார்.
மதுரையில் ஆய்வு
பிற்பகல் 2 மணியளவில் கார் மூலம் மதுரைக்கு வந்து சேரும் முதல்வர் எடப்பாடி நேராக கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். பிறகு ரூ. 326.10 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன்பிறகு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன்,பெரிய புள்ளான், மாணிக்கம், நீதிபதி மற்றும் கலெக்டர் வினய், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகளையும், தொழில்துறை நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
கோவிட் கேர் சென்டரில் ஆய்வு
அதை தொடர்ந்து காரில் புறப்பட்டு மதுரை அருகே வடபழஞ்சியில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன, 900 படுக்கைகளுடன் கூடிய கோவிட் கேர் சென்டரை அதாவது கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவில் மதுரையில் தங்குகிறார்.
நெல்லையில் ஆய்வு
நாளை காலையில் நெல்லை புறப்பட்டு செல்லும் முதல்வர் அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். நெல்லையில் புகழ் பெற்ற தாமிரபரணி ஆற்றில் ரூ. 18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் முதன்முதலாக நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு ஆகிய நதிகளை இணைத்து புதிய கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியையும் முதல்வர் பார்வையிடுகிறார். நெல்லையிலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
மேற்கண்ட நிகழ்ச்சியிகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.