எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகை தருகிறார்.
இங்கு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார். இன்று இரவு மதுரையில் தங்கும் அவர், நாளை 7-ம் தேதி நெல்லை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்துகிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1.84 கோடி பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் ஆரம்பத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், தற்போது கணிசமாக குறைந்து விட்டது.
இதே போல் மதுரையிலும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே. ராஜூ ஆகியோரின் அதிரடி நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. விரைவில் தமிழகம் முழுவதும் இந்த தொற்றின் பாதிப்பு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு சென்று அங்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திண்டுக்கல்லில் ஆய்வு
இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை நகருக்கு வருகிறார். முதலில் சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அதன் பிறகு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார். பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக முதல்வரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்கிறார்கள். திண்டுக்கல்லில் தனது பணிகளை முடித்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பகல் 12.30 மணிக்கு மதுரை புறப்படுகிறார்.
மதுரையில் ஆய்வு
பிற்பகல் 2 மணியளவில் கார் மூலம் மதுரைக்கு வந்து சேரும் முதல்வர் எடப்பாடி நேராக கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். பிறகு ரூ. 326.10 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன்பிறகு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன்,பெரிய புள்ளான், மாணிக்கம், நீதிபதி மற்றும் கலெக்டர் வினய், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகளையும், தொழில்துறை நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
கோவிட் கேர் சென்டரில் ஆய்வு
அதை தொடர்ந்து காரில் புறப்பட்டு மதுரை அருகே வடபழஞ்சியில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன, 900 படுக்கைகளுடன் கூடிய கோவிட் கேர் சென்டரை அதாவது கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவில் மதுரையில் தங்குகிறார்.
நெல்லையில் ஆய்வு
நாளை காலையில் நெல்லை புறப்பட்டு செல்லும் முதல்வர் அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். நெல்லையில் புகழ் பெற்ற தாமிரபரணி ஆற்றில் ரூ. 18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் முதன்முதலாக நதிநீர் இணைப்பு திட்டம் நெல்லை மாவட்டத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. அதாவது தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு ஆகிய நதிகளை இணைத்து புதிய கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியையும் முதல்வர் பார்வையிடுகிறார். நெல்லையிலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
மேற்கண்ட நிகழ்ச்சியிகளில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.


