எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் ‘நாசா’ அனுப்பிய ‘அப்போலோ-11’ விண்கலம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனை படைத்தனர். இதன் மூலம், ‘நிலவில் முதலில் கால்பதிப்பது யார்?’ என அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நடந்து வந்த விண்வெளி பந்தயத்தில், அமெரிக்கா வரலாற்று வெற்றியை பெற்றது.
நிலவில் மனிதர்கள் தரையிறங்கி அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், சீனா தற்போது நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக சீனா நீண்ட காலமாக தயாராகி வருகிறது. சீன விண்வெளி வீரர் வாங் லிவெய், கடந்த 2003-ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு சென்றார்.
அதன் பிறகு பல்வேறு விண்வெளி பயண திட்டங்களை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, சீனா தனது சொந்த விண்வெளி நிலையமான ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, வரும் 2030-ம் ஆண்டு ஓய்வு கொடுக்கப்படும். அதன் பிறகு உலகில் விண்வெளி நிலையத்தை கொண்டிருக்கும் ஒரே நாடாக சீனா தனித்து அதிகாரம் செலுத்தும்.
இந்த சூழலில், ‘மெங்சூ’ விண்வெளி பயண திட்டம் மூலம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. மொத்தம் 6 பேர் பயணம் செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை சீனா விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


