முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டும் உயிரிழப்பவர்கள் 10 சதவீதம் பேர் தான். வேறு நோய்களின் தொற்று காரணமாகவே தமிழகத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவ தொகுப்பில் கபசுர குடிநீர், மல்டி வைட்டமின், ஜிங் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்படுகிறது. வெளிப்படைத் தன்மையுடன் தகவல்கள் பகிர்வதால் தான் எண்ணிக்கை அதிகாமாக தெரிகிறது. 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்காப்பட்டவர்களில் இதுவரை 2 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து