எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு. 2021-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சிதான் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில், கொரோனாதடுப்பு பணிகள் தொடபர்பாக வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டுகுணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய களபணியாளர்கள் 3 பேருக்கு சால்வை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். இந்த ஆய்விற்கு பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர் குழு உள்ளிட்டவர்களை நியமித்து, அவர்களது தீவிர பணியின் காரணமாக தற்போது சென்னையில் கட்டுக்குள் உள்ளது. தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 82,928 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபபடியான பரிசோதனையின் காரணமாக 5,52,604 பேருக்குநோய்த்தொற்றுதமிழகத்தில் கண்டறியப்பட்டு, அதில் 4,97,377 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,தற்போது வெறும் 46,350 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், குறைந்த அளவுபோக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வதாக புகார்கள் வருகிறது.
எனவே படிப்படியாக பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுள்ளார். பிரதமருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார்.
மேலும் மருத்துவகுழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் படிபடியாக தளர்வுகளும், நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய அவசியம்,அதற்கான சூழல் இல்லை. வேளாண் மசோதா தொடர்பாக உரிய விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார்.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்தில் இல்லையென்றும், தமிழக விவசாயிகளுக்கு இந்த மசோதா மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாதும் எனவும் முதல்வர் தௌ;ள தெளிவாக தெரிவித்துள்ளார்.
அதே போன்றுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடர்ந்து இயங்கும் என்றும் மத்திய அரசுதெரிவித்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போடப்படும் ஒப்பந்தங்களை தேவைக்கேற்ப புதுப்பித்து கொள்ளலாம் என எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு அளித்து விட்டது.
தமிழக விவசாயிகள் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் உரிய விளக்கத்தை நேற்றைய தினம் அளித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் அளிக்காத விளக்கத்தை தமிழகமுதல்வர் அளித்துள்ளார்.
எனவே தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இதனால் பாதகம் இல்லை என்றும், முதல்வர் என்றைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவானவர். எல்லா விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என விளக்கமாக கூறும் வகையில் அரசு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாகவும், கொந்தளிப்புடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார், அதற்காக பல்வேறு காரணங்களை தேடி அலைந்துகொண்டு இருக்கிறார்.
வெறும்வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதா வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது மக்களிடத்தில் எடுபடாது -
இதுபோன்று பல்வேறு பிரச்னைகளில் மக்களை திசை திருப்ப திமுக போட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளது. அதுபோன்று வேளாண்மசோதா தொடர்பாக விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்து வரும் திமுகவிற்கு. இந்த விஷயத்திலும் தோல்வி தான்கிடைக்கும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தேர்தல் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பல்வேறு கருத்துக்கள் இந்த பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் திட்டவட்டமாக கூறிய அமைச்சர், 'ஊரெங்கும் ஒரே பேச்சு@ 2021ல் அம்மாவின் ஆட்சி' தான். தமிழக மக்களும் அதிமுக அரசு செய்து வரும் பணியை ஏற்று கொண்டுள்ளனர்.
அதேபோல் இரண்டாம் தலைநகர் உருவாக்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரும் தன்னுடைய கருத்தைவிளக்கமாக கொடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக தானா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு மருத்து முகாமை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார், அங்கு மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்களுக்கு முககவசம், சானிடைசர், கபசுரகுடிநீர், வைட்டமின்மாத்திரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் கண்காணிப்பு அதிகாரி அரவிந்தன் ஐ.ஏ.எஸ்., முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.