முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை எதிரொலியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை மேலும் நேற்று கார்த்திகை திருநாள். இத்தகைய காரணங்களால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை திடீரென கடுமையாக உயர்ந்ததாக காய்கறி வியாபாரி மணிகண்டன் என்பவர் தெரிவித்தார். 

அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் விலை உயர்ந்து நேற்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து