முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு

திங்கட்கிழமை, 19 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆா்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆா்.எஸ். பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து ஆா்.எஸ். பாரதி தரப்பில் வழக்கறைஞர் அமித் ஆனந்த் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ஆா்.எஸ். பாரதி பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, விரோத உணா்வுகளை தூண்டும் வகையில் பேசவில்லை எனத் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சசீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி உள்நோக்கத்துடன் எதுவும் பேசவில்லை என கூறி வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து