எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நியமித்தது. இதையடுத்து வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக அவர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 17சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் அரசுகள் அவர்கள் மீதான வழக்குகளை சி.ஆர்.பி.சி. 321-ன் படி வாபஸ் பெறுகிறார்கள் எனவும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் வினீத் சரண், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. இதுதொடர்பாக நேற்று அவர்கள் பிறப்பித்த உத்தரவில் நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் திரும்பப்பெற கூடாது.
அதேப்போன்று விசாரணைகளை நடத்தி வரும் சி.பி.ஐ. உட்பட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் தற்போது உள்ள அதே பணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் பணியிடம் மாற்றமோ அல்லது வேறு விசாரணைக்கு அமைக்கும் சூழலோ ஏற்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்து கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ


