எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவை மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)அதாவது ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என இந்த மசோதாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது. இது மிகவும் புரட்சிகரமான சட்டம். இந்த சட்டம் இயற்றப்பட்டபோது அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டன. ஏழைகளிலும் ஏழைகளுக்கு இது 100 நாள் வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இந்த மசோதா, வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையை பலவீனப்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான மானியங்களில் 90 சதவீதம் மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த மசோதாவின் கீழ் பெரும்பாலான மாநிலங்கள் 60 சதவீதம் நிதியை மட்டுமே பெறும். இது மாநில அரசுகளின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இந்த மசோதா மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் அதன் பொறுப்பைக் குறைக்கிறது.
இந்த மசோதா வேலை நாட்களை 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்துவது குறித்து பேசுகிறது. ஆனால், ஊதிய உயர்வு குறித்து குறிப்பிடவில்லை. ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் மாற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் வெறி எங்களுக்குப் புரியவில்லை. இந்த மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதவை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக புதிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என வலியுறுத்தினார். இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, இந்த மசோதா மூலம் தேசப்பிதா கேலி செய்யப்படுகிறார் எனக் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


