முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு விவகாரம்: மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றும்,  கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்  மீதான மூன்றாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. இதில் கொடநாடு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை. 

கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியாக எந்த தலையீடும் இல்லை. தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் அனுமதியுடன் தான் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து